Monday, 26 October 2020

கை தட்டுதல்

சில விடயங்களை கவனித்து பாருங்கள். அவை சின்ன சின்ன விடயங்களாக இருக்கும். ஆனால்  பெரும் நன்மைகளை செய்து விடும். 

இங்கும் கூட "கை தட்டுதல்" என்பது ஒரு சின்ன விடயம். நாம் பிறரை உற்சாகப்படுத்த கைகளை தட்டுகிறோம். அவர் அந்த ஒலி அலைகள் மூலம் உற்சாகம் கொள்கிறார். ஆனால் நாம் நம் உடலில் தோன்றும் அதிர்வலைகளால் உற்சாகம் கொள்கிறோம். 


நாம் அடுத்தவர்களுக்காக கை தட்டும் அதே நேரம் நமக்காகவும் கொஞ்சம் கை தட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். 

பிராண முத்திரை

மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

Saturday, 10 October 2020

கிருத்திகை மந்திரம்

 🌺வாழ்வில் அனைத்து யோகங்களையும் பெற உதவும் கிருத்திகை மந்திரம்🏵


🌺நமக்கு கிடைத்த இந்த வாழ்கையை சிறப்பாக்கிக் கொள்ள நமக்கு நோய்கள் அணுகாத உடலாரோக்கியமும், நினைத்த போது நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நல்ல செல்வ நிலையும் வேண்டும். 

சோம வாரம் கார்த்திகை விரதம்

 சோம வாரம் கார்த்திகை விரதம் நவக்கிரக வழிபாடு

 புரட்டாசி சோமவாரத்தில் சிவ வழிபாடு செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. அதேபோல் சோம வாரத்தில் கார்த்திகை விரதம் வருவது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. இந்தநாளில் சிவனாரை வணங்கி, முருகக் கடவுளை வணங்கி, நவக்கிரகத்தை வலம் வருவது தோஷங்கள் அனைத்தையும் நீக்கும். சந்தோஷத்தைப் பெருக்கும்.

 சோமவாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். திங்கள் என்றால் சந்திரன். சோமன் என்றால் சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று. சந்திரனைப் பிறையென சிரசில் சூடிக்கொண்டிருப்பவர் என்பதால் ஈசனுக்கு சோமன் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் சந்திரசேகரன் என்கிற திருநாமமும் உண்டு.

Monday, 14 September 2020

பிரதோஷம்

அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான்.
அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.

அவளிடம் வந்த நந்தி,""தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன்,

ஞாயிறு பிரதோஷம்

ஞாயிறு பிரதோஷம்... ராகுகால பிரதோஷ தரிசனம்!

ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. இன்று 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள்.

இன்று பிரதோஷம். இந்த நாளில், சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.

Tuesday, 8 September 2020

காசி க்ஷேத்திரம் மகிமை

காசி க்ஷேத்திரத்தில் பார்வை படும் இடமெல்லாம் லிங்க ஸ்வரூபம் காணப்படும். தரையில் பல இடங்களில்ந லிங்க ஸ்வரூபம் இருப்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் காசி நகரத்தில் மலஜலம் கூட கழிக்காது நகருக்கு வெளியே செல்வார் என்றும், காஞ்சி மஹா பெரியவர் காசியில் வசிக்கும் காலங்களில் காலில் பாதுகையே அணியமாட்டார் என்றும் கூறுவர். காசியில் செயலேதும் புரியாமல் சும்மா படுத்திருந்தாலும் உயர்ந்த யோகம் செய்வதற்கும் மேலாகும் என்பது பொதுவான கருத்து.

காசி விஸ்வநாதரின் தேவி விசாலாட்சி அம்மனாகும் . 1893 -ஆம் ஆண்டு தேவிக்குத் தனிக்கோயில் நகரத்தார்களால் அமைக்கப்பெற்று இங்கும் 3 வேளை பூஜைக்கு நகரச் சத்திரத்தில் இருந்து "சம்போ' உடன் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. தீபாவளியின்போது மட்டும் இரண்டு நாள்களுக்கு நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் உள்ள ஸ்வர்ண உற்சவ விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுகின்றார்.

கடையம் வந்தால் கவலை தீரும்!

கடையத்துக்கு வந்தால் கவலைகள் பறந்தோடும் என்பார்கள். கடையத்தில்தான், வில்வங்களில் ஈடுபாடும் ஆசையும் கொண்ட வில்வவனேஸ்வரர் குடிகொண்டிருக்கிறார்.

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது கடையம் . அழகிய கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் வில்வ வன நாதர். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீநித்ய கல்யாணி அம்பாள்.

அற்புதமான ஆலயம். புராதனமான திருத்தலம். ஒருகாலத்தில் வில்வ வனமாக இருந்த இந்தத் தலத்தில் கோயில் கொண்டதால், சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வேண்டிக் கொண்டால் நம்மையும் நம் வாழ்வையும் சிவனார் பார்த்துக் கொள்வார்.

அருள்மிகு ஸ்ரீ மருதாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வர் திருக்கோயில்,. ரங்கமலை,

அருள்மிகு ஸ்ரீ மருதாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வர் திருக்கோயில்,.
ரங்கமலை,
ஆலமரத்துப்பட்டி,
அரவக்குறிச்சி வட்டம்,
கரூர் மாவட்டம்.

 ( ஸ்ரீ விஷ்ணு பெயரில் அமைந்துள்ள இந்த ரங்க மலையில், சிவபெருமான் ஆலயம் அமைந்துள்ளது இம்மலைச்சிறப்பு.

( 🤔தன் தங்கையை திருமணம் செய்த ஈசனுக்கு, ரங்கநாத பெருமாள் தந்த அன்பு பரிசு என்கிறார்கள்)

கரூர் to திண்டுக்கல் (NH-7) தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் சென்றிருந்தால், திருவண்ணாமலை தோற்றத்துடன் அதை விட சற்று பெரிதாக (சுமார் 3500-அடி உயரம்) அருட்காட்சியளிக்கும் இந்த ரங்கமலை நிச்சயம் உங்கள் பார்வை தரிசனம் கண்டிருக்கும்.

அம்மணி அம்மன் கோபுரம்....

ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல....

அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.*

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

பட்டீஸ்வரர் !!! பேரூர்

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து.

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து "பேரூர் " என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,. . .

விநாயகருக்கு . அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன்

விநாயகருக்கு . அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன்
விநாயகருக்கு பல்வேறு இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.

கண்டங்கத்தரி இலை - லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மாதுளை இலை - நற்புகழ் கிடைக்கப்பெறும்.

வெள்ளெருக்கு இலை - சகல பாக்கியங்களும் அருளப்படும்.

அரளி இலை - குடும்பத்தில் அன்பு ஓங்கி நிற்கும்.

விநாயகரின் உருவத்தின் உண்மையான அர்த்தம்

விநாயகரின் உருவத்தின் உண்மையான அர்த்தம் எதைக் குறிக்கிறது தெரியுமா??

மேலும் சிறுவயதில் முதல்  பின் வரும் இந்த பாடலை நாம் பலமுறை பாடி இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம் .ஆனால் இந்த பாடலின்  உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!

விநாயகர்

’வேத காலம்’ என்று கூறப்படும் தொன்மையான காலகட்டத்திற்கும் முன்பிருந்தே விநாயகர் வழிபாடு உலகின் பலபகுதிகளிலும் இருந்து வந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

💐கணேச புராணம்’ விநாயகர் அவதாரத்தை யுகத்திற்கொன்றாக நான்கு அவதாரமாகக் கூறுகின்றது.

💐விநாயகரின் தோற்றம் பற்றி பலவிதமான கருத்துக்கள் வழங்கப்படுகின்றன.

💐கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார்.(உமையம்மை மஞ்சளைத் திரட்டி விநாயகர் செய்தார் என்றும் கூறுவர் ) யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார்.

இந்து_மதத்தின் பெருமை!

இந்து_மதத்தின் பெருமை!
வேறு எந்த மதத்திலும் இல்லாத
ஒரு பெருமை ஹிந்து
மதக்கடவுளுக்கு உண்டு .

ஏனெனில்
கடவுளை எல்லா விதமாகவும்
வழிபடும் தன்மை ஹிந்து
மதத்தில் மட்டும் தான்...உள்ளது
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்

ஞானம்

ஞானப்பழ கதையில்
நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை ‘ஞானத்தின்’ குறியீடாகக் கொள்வோம்.

அதை அவர் பங்கிடக்கூடாது என்கிறார். அதாவது, ஞானம் என்பது பங்கிட முடியாதது; அதாவது முழுமை அல்லது நிறைவு.

உலகைச் சுற்றி வரும் போட்டி’க்கு வருவோம். உலகம் எதை உலகம் எனச்சொல்கிறதோ அதைச் சுற்ற முருகன் கிளம்பிவிடுகிறான்.

விநாயகனோ தான் எதை உலகம் என நினைக்கிறானோ அதை முதன்மைப்படுத்துகிறான்.

எளிமையாகச் சொல்வதானால்

ஞானப்பழ கதையில்
நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை ‘ஞானத்தின்’ குறியீடாகக் கொள்வோம்.

அதை அவர் பங்கிடக்கூடாது என்கிறார். அதாவது, ஞானம் என்பது பங்கிட முடியாதது; அதாவது முழுமை அல்லது நிறைவு.

உலகைச் சுற்றி வரும் போட்டி’க்கு வருவோம். உலகம் எதை உலகம் எனச்சொல்கிறதோ அதைச் சுற்ற முருகன் கிளம்பிவிடுகிறான்.

விநாயகனோ தான் எதை உலகம் என நினைக்கிறானோ அதை முதன்மைப்படுத்துகிறான்.

எளிமையாகச் சொல்வதானால்

முருகனைச் சமூகப்பார்வையாகக் கொள்ளலாம்; விநாயகனைத் தனியொருவனின் பார்வையாகச் சுட்டலாம்.

யாருக்கு ஞானம்(பழம்) கிடைக்கிறது, விநாயகனுக்கு அல்லவா? இக்கதையின் வழியாக நான் பெற்ற மூன்று புதிய செய்திகள் : 1)

ஞானப்பழத்திற்கான போட்டி விநாயகன், முருகன் எனும் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. எனவே, ஞானம் என்பது குழந்தை மனோநிலை உள்ளவர்களுக்கே சாத்தியமாகிறது.

2) உலகம் முன்வைக்கும் வாழ்வை வாழ்கிறவனுக்கு ஞானம் கிட்டவே வாய்ப்பில்லை. எவனொருவன் தான் நினைக்கும் வாழ்வை வாழ்கிறானோ அவனுக்கே அது சாத்தியம். இன்னும் நுட்பமாகப் பார்க்க முருகனைப் புற உலகாகவும், விநாயகனை அகஉலகாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

3) வெளியே சுற்றித்திரும்பும் முருகனுக்குப் பழம் கிடைக்கவில்லை. அங்கேயே இருக்கும் விநாயகனுக்கே கிடைக்கிறது. ஆக, ஞானம் என்பது எங்கேயோ, எதிலோ இல்லை. அங்கேயே, அப்போதே இருக்கிறது."
ஞானப்பழ கதையில்
நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை ‘ஞானத்தின்’ குறியீடாகக் கொள்வோம்.

அதை அவர் பங்கிடக்கூடாது என்கிறார். அதாவது, ஞானம் என்பது பங்கிட முடியாதது; அதாவது முழுமை அல்லது நிறைவு.

உலகைச் சுற்றி வரும் போட்டி’க்கு வருவோம். உலகம் எதை உலகம் எனச்சொல்கிறதோ அதைச் சுற்ற முருகன் கிளம்பிவிடுகிறான்.

விநாயகனோ தான் எதை உலகம் என நினைக்கிறானோ அதை முதன்மைப்படுத்துகிறான்.

எளிமையாகச் சொல்வதானால்

முருகனைச் சமூகப்பார்வையாகக் கொள்ளலாம்; விநாயகனைத் தனியொருவனின் பார்வையாகச் சுட்டலாம்.

யாருக்கு ஞானம்(பழம்) கிடைக்கிறது, விநாயகனுக்கு அல்லவா? இக்கதையின் வழியாக நான் பெற்ற மூன்று புதிய செய்திகள் : 1)

ஞானப்பழத்திற்கான போட்டி விநாயகன், முருகன் எனும் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. எனவே, ஞானம் என்பது குழந்தை மனோநிலை உள்ளவர்களுக்கே சாத்தியமாகிறது.

2) உலகம் முன்வைக்கும் வாழ்வை வாழ்கிறவனுக்கு ஞானம் கிட்டவே வாய்ப்பில்லை. எவனொருவன் தான் நினைக்கும் வாழ்வை வாழ்கிறானோ அவனுக்கே அது சாத்தியம். இன்னும் நுட்பமாகப் பார்க்க முருகனைப் புற உலகாகவும், விநாயகனை அகஉலகாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

3) வெளியே சுற்றித்திரும்பும் முருகனுக்குப் பழம் கிடைக்கவில்லை. அங்கேயே இருக்கும் விநாயகனுக்கே கிடைக்கிறது. ஆக, ஞானம் என்பது எங்கேயோ, எதிலோ இல்லை. அங்கேயே, அப்போதே இருக்கிறது."

மாலையில் மகேஸ்வரன்.....🙏

ல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்ய வேண்டும். மாலையில் பரமேசுவரனைத் தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு உலகைப் பரிபாலிப்பவர்.

 காலையில் உலக காரியங்களைத் தொடங்கும் முன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒடுங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஓய்கின்றன.

 நாம் பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது.
பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலுக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன.

வெளியிலே திரியும் எண்ணங்களையெல்லாம் அப்போது இருதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும்.

எச்சம்மா

நமது  குடும்பங்களில் சிலவற்றில் அல்ல பலவற்றில்  லக்ஷ்மி  என்கிற  பெயர்  லஷ்மி, லெஷ்மி, லெச்சுமி, எச்சுமி,  லெச்சம்மா, எச்சம்மா என்றெல்லாம்  அபிமானத்தோடு அழைக்கப்படுபவை.  இப்போது நாகரிகமாக பெயர்கள் வைத்துக்கொள்ளும்  பெண்கள் இப்படி கூப்பிட்டால்  எப்படி ஏற்றுக் கொள்வார் கள்,  REACT பண்ணுவார்கள் என்று  எண்ணிப்பார்க்க பயமாக இருக்கிறது.

திருவண்ணாமலையில் ஒரு எச்சம்மா பாட்டி இருந்தாள் பாவம் அடுத்தடுத்து கணவன், பிள்ளை, ரெண்டு பெண்களை இழந்து அனாதையானவள். இருந்தும்  குரு கடாக்ஷத்தால் வாழ்வில்  துன்பங்கள் தொடராது என்று நம்பிக்கை கொண்ட வள்.  இளம் வயதில் விதவை, படிப்பு வாசனை கிடையாது,  பணமோ சொத்து சுதந்தரமோ இல்லாதவளு க்கு போக்கிடம் எது? 

உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்!!!

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

1. அசுவினி :
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.

2. பரணி :
கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே.

வேல்

வடிவேல் என்ற தமிழ்ச்சொல் அழகானது. வினைத்தொகை! வடிக்கப்பட்ட வேல், வடிக்கப்படும் வேல், வடிக்கப் படப்போகும் வேல். 

ஒருவித dynamic ஆயுதம், வளரும் ஆயுதம்! தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும், கூர்ப்படுத்திக் கொள்ளும் உயிர்ப்புள்ள ஆயுதம்.  ஏதோ ஒரு யுகத்தில் பார்வதியால் தன் பிள்ளைக்காக வடிவமைத்துக் கொடுக்கப்பட்டு, சூர பத்மாவைத் துளைத்துச் சென்று  கொன்று போட்டதுடன்  அதன் வேலை முடிந்து விடவில்லை என்று தோன்றுகிறது. வடி-வேல், growing, evolving!

கதாயுதம்  துர்க்கையிடமும் இருக்கும். அனுமனிடமும் இருக்கும். சூலாயுதம் சிவனிடமும் இருக்கும், பார்வதியிடமும் இருக்கும். பாசம் விநாயகரிடம் இருக்கிறது. யமனிடமும் இருக்கிறது. ஆனால் வேல்? முருகனுக்கே உரியது. பிரத்யேகமானது.  மற்ற தெய்வத்துக்குப் பொருத்திப் பாருங்கள். odd ஆக இருக்கும். வேல் மட்டுமே  destructive weapon ஆக மட்டும் இல்லாமல் constructive weapon ஆக இருக்கிறது. ஞான வேல்! ஞான திரிசூலம், ஞான வாள், ஞான வில் என்றெல்லாம் சொல்வதில்லை. ஆயுதத்தை அறிவாக மாற்றும் ரசவாதம்!  ஆயுதத்தை positive ஆக ஞானத்துடன் ஒப்பிடுவது இங்கு தான். அறியாமை அழிந்தாலே எஞ்சி இருப்பது ஞானம் தானே?  வேலுக்கு வடமொழியில் 'சக்தி' என்றே பெயர். ஆற்றல் வடிவற்றது. கட்புலனாகாதது. ஒருவேளை ஆற்றலுக்கு ஒரு வடிவம் கொடுக்க முடிந்தால் அது வேல் வடிவிலேயே இருக்கும் என்று தோன்றுகிறது.

வேலின் வலிமை எறிபவன் கையில் இருக்கிறது. அதன் வேகத்தில் இருக்கிறது. வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி ஆக்கும் வடிவேல்! அறிவின் கூர்மை, அறிவின் வேகத்தில் இருக்கிறது. அறிவு, ஞானம் static ஆக இருந்து பயனில்லை. applied knowledge. எறிபவன் வேண்டும்! அறிவு பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு வேலும் அதற்குரிய முருகனைத் தேட வேண்டும்!  கிரௌஞ்ச மலையை முருகனது வேல் பிளந்து பொடியாக்கியதால் ஒவ்வொரு மலையும் வேலிடம் பயப்படுகிறதாம். (நிபிடமுடி நெடியகிரி எந்தமைக்கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடு வேல்!) ஆனாலும் மலை தோறும் முருகன் வீற்றிருப்பது அழகிய முரண்!

கதாயுதத்தைத் சதா தூக்கிச் சுமக்க முடியாது. கனம்!  வில்லுக்கு அம்பு வேண்டி இருக்கிறது. அம்பு இல்லையேல் வில் வீண்! வாளுக்கு உறை வேண்டி இருக்கிறது. இல்லையேல் கையைக் கிழித்து விடும். கேடயம் என்ற துணைக்கருவி தேவைப்படுகிறது. திரிசூலம் கூட மூன்று இடங்களில் குத்துகிறது. சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இரண்டு சூலாயுதங்கள் சண்டையிட்டால் அடிக்கடி சிக்கிக்கொண்டு விடும்! ஆனால் வேல் ஒரு perfect ஆயுதம். handy! peak கில் மட்டும் கூர்மை. கையில் பிடித்துக் கொள்ளலாம். சுலபமாக எறியலாம்!

முருகனுக்கு இரும்புப்  பட்டறையில் 24 x 7 வேல் வடிக்கும் வேலை தானா என்று நாத்திகர்கள் சிலர் கேலி செய்யலாம். ஆனால் அந்தத் தொழிலில் ஒன்றும் தவறு இல்லையே? சேனாதிபதி ஒருவனுக்குப் பட்டறையில் வேலை இருப்பது பெரிய விஷயம் இல்லையே? ஆயுதங்கள் பளபளப்பாக showcase சில் அடுக்கி வைத்திருந்தால் அது வீரனுக்கு அழகல்லவே? மேலும் demand இருக்கும் வரை production னும் இருக்கும் தானே? கெட்டவை முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் குத்திக் கிழிக்க வேல்கள் வடிக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கின்றன.மேலும், வேல் வடிக்கும் formula வை பணியாளர்களுக்குச்  சொல்லிக் கொடுத்து விட்டு முருகன் கல்லாவில் வந்து அமரக் கூடாதா என்ன? சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய இரும்புக்கடை முதலாளி முருகன் தான். முருகனின் 'செட்டி' என்ற பெயரைக் கவனிக்கவும். ஏரகத்துச் செட்டியார்! மிகப்பெரிய வணிகர். missile supplier!

சஷ்டி கவசத்தில் இந்த வரிகள் மனம் கவர்ந்தவை:

வீசியதை அள்ளலாம்; பேசியதை அள்ள முடியாது என்று சொல்வார்கள். பேசிய வார்த்தைகள் பேசியவை தான். அவற்றின் consequence-சில் இருந்து நாம் தப்பவே முடியாது. வாய் இருக்கிறது என்று பேசி விட்டு எத்தனை பேர் அதன் legal consequence ஐ அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்? ஆனால், முருகனின் பெருவேல் அதிலிருந்தும் நம்மைக் காக்கிறதாம். குற்றம் இறந்தகாலத்தில் past-டில் நிகழ்ந்து இருந்தாலும் நம்மைக் காக்கிறதாம்.  'பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க'. பேசும் வாய் இல்லை. பேசிய வாய்! போய பிழையும் புகுதருவான்!!

"அடியேன் வசனம் அசைவுள நேரம்கடுகவே வந்து கனகவேல் காக்க"

- இதற்காகவே  நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் வேல் உற்பத்தி வேண்டுமே ஐயா! மனிதர்கள் சதா வசனித்துக் கொண்டே இருக்கிறார்களே. 'என்னுடைய வசனங்கள் கொஞ்சம் அப்படி இப்படி அசைந்தாலும் உடனே வந்து கனகவேல் காக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்கிறார் இந்த அடியவர். இந்தப்பக்கம், அந்தப்பக்கம் சாயாத நடுநிலை நியாய வசனம்! மனிதர்களுடன் ஓர் இரண்டு நிமிடம் பேசினாலே அவர்கள் சார்பு வெளிப்பட்டு விடுகிறதே, சாயம் வெளுத்து விடுகிறதே, தொண்டை வழியே மண்டையில் இருக்கும் கொண்டை வெளிப்பட்டு விடுகிறதே, நடுவு நிலைமையில், கோர்ட் தராசு போல எத்தனை பேரால் அசைவின்றிச் சாயாமல் சிதறாமல் சரியாமல் சறுக்காமல் பேசிவிட முடியும்?

தராசு செய்பவன் கதை ஒன்று வருகிறது. ஒரு ஆள், இப்படித்தான் பட்டறையில் தினமும் நூற்றுக் கணக்கில் தராசு செய்து சந்தையில் விற்பவன். ஒரு கட்டத்தில் வாழ்க்கை சலித்து விடுகிறது. ஞானத்துக்கான தேடல் வந்து விடுகிறது. தொழிலைத் துறந்து விட்டு, மனைவி மக்களை விட்டுத் தொலைதூரம் காடுமலை கடந்து சென்று ஞான குரு ஒருவரைச் சந்திக்கிறான். அவர் சிரித்து  விட்டு, 'அட, நீ செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் அப்பா, என்னைத் தேடியா வந்தாய்? நானும் தராசு செய்பவன் தான், இந்தப் பக்கம் அந்தப்பக்கம் அசையாத அந்தத்  தராசின் முள் தான் ஞானம், போ, திரும்பிப் போ, தராசைக் கவனி, அதே நேரம் உன் மனதையும் கவனி, எந்தப் பக்கம் முள் சாய்கிறது என்று கவனி, சாய்ந்தால் ஏற்றி நிறுத்து, அதுதான் ஞானம் " என்று உபதேசித்துத் திருப்பி அனுப்புகிறார்.

சூரபத்மனை அழித்தது கூட வேலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

மயில் என்பது வேலின் by-product மற்றொரு வடிவம் தான். மரத்தைப் பிளந்ததும் ஒரு பாதி மயிலாகிறது. ஒரு பாதி கொடியாகிறது. ஒன்று முருகனைச் சுமக்கிறது. ஒன்றை முருகன் சுமக்கிறான். again, அத்தனை பெரிய ஆகிருதியை அத்தனை சிறிய feathery பறவை எப்படிச் சுமக்கும் என்ற நாத்திக வாதம் உள்ளே வருகிறது. மாமரம் பறக்க ஆசைப்படுகிறது. பரிணாமத்தில் முன்னேற விரும்புகிறது. மரத்தால் நகரக் கூட முடியாது, பறப்பது எப்படி? முருகனின் வேலால் அதற்கு விமோசனம் வருகிறது. சிறகுகள் வருகின்றன. நன்றி மறவாமல், சிறகு தந்தவனைத் தூக்கிச் சுமக்கிறது மர மயில். நமக்குச் சிறகு தந்தவர்களை, பறக்க வைத்தவர்களை, தூக்கி விட்டவர்களைக் காலமெல்லாம் நாம்   தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற நன்றி மறவாமை மயிலின் தத்துவம்!

சூரன் தன்னை ஒரு மாமரமாக disguise செய்து கொள்கிறான். ஒரே ஒரு மாறுவேடம் தான். வேல் அவனைச் சுலபமாகப் பிளந்து செல்கிறது. ஆனால் இன்றைய உலகின் அரக்கர்கள் எத்தனையோ மாறுவேடங்களைப் புனைந்து கொண்டு விடுகிறார்கள். மண்ணாக, மரமாக, மலையாக, மனிதனாக, மகானாக! சிலநேரம் பக்தர்களாகவும் வேடம் போடுகிறார்கள். வேலே சிலநேரம் குழம்பிப்போய் விடும்படி. மரமாக நின்றால் பிளக்கலாம். மரவுரி தரித்து மகா தபஸ்வியாக வேடமிட்டால்? மயிலும் மயங்குமே! இப்படி ஒவ்வொரு மாறு வேடத்துக்கும் ஒவ்வொரு வேல் தேவைப்படுகிறது. factory யில் assembly line களில் அதன் உற்பத்தி நிற்பதே இல்லை. 24 x 7 non stop production!

சில நேரங்களில் ஞான விநியோகம், பல நேரங்களில் சூர சம்ஹாரம்!

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020 - 2022

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் #ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் #விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சியாகும் இவர்கள் 1.9.2020 முதல் 21.3.2022 வரை அந்தந்த ராசிகளில் அமர்ந்து 12 ராசிகாரர்களுக்கும் பலாபலன்களை வழங்குவார்கள்.

மேஷம்

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு   3 ம் இடத்தில் இருந்து காரியங்களில் வெற்றியும் , மன தைரியத்தையும் அளித்து வந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு 2 ம் வீட்டில் அமரபோகிறார்.  பேச்சில் சற்று நிதானம் தேவை. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும் ஆகவே சேமிப்பை #அதிகபடுத்தவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குலையும் எனவே விட்டுக்கொடுத்து போவது நல்லது. எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பெண்களுக்கு நாவடக்கம் மிக முக்கியம்.

முகலிங்க மூர்த்தி

சைவ சமயத்தில் சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை. பக்தர்களுக்கு அருளும் பொருட்டு அவர் வடிவம் மட்டுமே எடுக்கிறார். சைவத்தில் சிவனின் திருவடிவங்கள் மூர்த்தங்கள் எனப்படும். சைவத்தில் சிவனுக்கு 64 மூர்த்தங்கள் உள்ளது. அந்த மூர்த்தங்களில் ஒன்று முகலிங்க மூர்த்தி ஆவார்...

சிவபெருமானின் வழிபாடு, சிவலிங்க வழிபாடு(சகளம்-உருவ வழிபாடு , நடராஜர் வழிபாடு, சோமாஸ்கந்தர் வழிபாடு என பரவலாக உள்ளது .

சகளம், சகளத் திருமேனி என்று அறியப்படும் அருவுருவ நிலையானது, சதாசிவ வடிவமாக இருக்கும் முகலிங்கத்தினை குறிப்பதாக அமைகிறது. சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆட்யம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முகம் பெறும்.

சிவசங்கரி சிவானந்தலஹரி

தர்பாரி கானடா இராகம்

சீர்காழி கோவிந்தராஜன்

* அம்மன் பக்தி கீதம்*
👇👇👇

சிவசங்கரி.....
சிவசங்கரி.....

சிவானந்த லஹரி
சிவானந்தலஹரி

சிவசங்கரி....
சிவசங்கரி...

சந்திரகலாதரி ஈஸ்வரி
கருணாம்ருதம் தனைப்
பொழிகவே அம்மா

மனது உருகி வா
மகிமை தோன்ற வா

ஏழை பாலனையும்
காக்க வா....

சிவசங்கரி சிவானந்த லஹரி
சிவசங்கரி

நாத விந்துக லாதீ நமோநம

*திருப்புகழ் *
சுதா ரகுநாதன்
👇👇👇

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித சாமீ நமோநம ......
வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ......
பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ......
கிரிராஜ

🔥ராகு கேது🐍 பெயர்ச்சி 2020 - 2022

🦅இன்று செப்டம்பர் 1 ராகு கேது பெயர்ச்சி 2020.

🦅கடந்த 1 1/2 வருடங்களாக மிதுனத்தில் இருந்த ராகு ரிஷபத்திற்கும், தனுசில் இருந்த கேது விருச்சிகத்திற்கும் பெயர்ச்சியாகிறது...

🦅இது உலகளாவிய பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது... குறிப்பாக, 🐍கொரோனா எனும் கொடிய வைரஸிடம் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது...

🐍ராகு பகவான் தனது குருவான சுக்கிராச்சாரியாரின் வீடான ரிஷபத்தில் நின்று உச்சம் பெறுகிறார்... இது மிகவும் சிறப்பு...
மக்கள் சுகபோத்தில் திழைத்து விளங்கப் போகிறார்கள்...

🦅ஆடை, அணிகலன், ஆடம்பர பொருட்களின் விலை அதிகரிக்கும்...

சிவபெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

"சிவபெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்"
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது.
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார். ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக்

ஆத்தி வரதரின் பழம்பெரும் வரலாறு

ஆத்தி வரதார், காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் அசல் சிலை, ஒரு அத்தி மரத்திலிருந்து மரத்தினால் ஆனது, பிரம்மா அஸ்வமேதாயகம் (யாகம்) செய்தபோது புனிதமான தீப்பிழம்புகளிலிருந்து வெளிப்பட்டது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சின்னச் சின்னது, மேலும் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கர்பக்ரஹத்தில் இந்த மூர்த்தி பிரதான தெய்வமாக இருந்தது.

Monday, 10 August 2020

தினம் ஒரு பழமொழி

தினம் ஒரு பழமொழி - பொருள் அறிவோம்.

 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.கல்லைக் கண்டால் நாயைக் காணோம்'

உண்மைப் பொருள்: காலபைரவர் சிலையைக் கலைக்கண்ணோடு பார்த்தால் நாயின் உருவம் தெரியும். கல் என்று நினைத்துப் பார்த்தால் கல்லே தெரியும். எதையும் நாம் பார்க்கும் கண்ணோட்டமே நிர்ணயிக்கிறது.

Monday, 27 July 2020

இயற்கை மருத்துவம்

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

இரத்தம் சுத்தமாக இருக்க நாம் சாப்பிட வேண்டியவை

இயற்கை மருத்துவம் :-

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

இஞ்சியின் மருத்துவப் பயன்கள்

* இஞ்சித் துவையல் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

* இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

* இஞ்சி டீ குடிக்க சளித் தொல்லை உண்டாகாது.

* காது சம்மந்தமாக எந்த நோயும் ஏற்படாமல் இருக்க இஞ்சிப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

* இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.

பெளத்திரம் குணமாக எளிய மருந்து

மூலத்தை விட கொடிய வியாதி மூல பெளத்திரம் ஆகும்
ஆசனவாயின் அருகில் சிறிய கட்டி போல் உருவாகி
 பின்னர் உடைந்து விடும்
,சிறிது நாளில் புண் ஆறிவிடும்.
இது போல் ஆசன வாயைச் சுற்றிலும் கட்டி உருவாகி உடைந்து உபத்திரவத்தை தரும்,
 சில சமயம் புண் ஆறாமல் துவாரம் விழுந்து அதில் இருந்து நீர் கசிந்து கொண்டிருக்கும்.
புண் உட்பக்கம் ஊடுருவ ஆரம்பிக்கும்
 அதில் இருந்து நீரோ அல்லது ரத்தமோ கசிந்து கொண்டிருக்கும்,
 பெளத்திர நோயாளிகள் எப்போதும் வேதனையுடன் இருப்பார்கள்.
இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை பலன் தராது
இந்த நோயை சித்த மருத்துவத்தில் மிகவும் சுலபமாக குணப்படுத்தலாம் ,

மின்ட் துளசி

மெந்தால் என்ற வேதிப் பொருள் இதில் இருந்துதான் செய்யப் படுகிறது
சுகந்தமான வாசனை உள்ள துளசி செடி இது
உள் மருந்தாகப் பயன்படுத்தும்போது
 நுரையீரல் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சினைகள்
வெளிப்புற மருந்தாக
மூட்டு வலி சம்பந்தப் பட்ட பிரச்சினைகள்
தலைக்குப் பயன்படுத்தும்போது
பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கும்
மருந்தாகப் பயன்படுகிறது
அரைத்து எடுத்து கிடைக்கும் விழுது ஒரு கொட்டைபபாக்கு அளவு அல்லது பிழிந்து கிடைக்கும் சாறு முப்பது மில்லி மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்  இதை உணவுக்கு பின் மட்டுமே சாப்பிட வேண்டும்

அடுக்கு தும்மல் கசாயம்

நுரையீரல் மண்டல நோய்கள்
குறிப்பாக காலை எழுந்தவுடன் இருபது முப்பது வரை அடுக்கு தும்மல்
பக்கத்தில் ஊதுவத்தி அல்லது சோப்பு சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் வாசனை பட்டால் உடனே தும்மல்
 தும்முவது மட்டுமல்ல மூக்கில் குழாயைத் திறந்து விட்டது போல தண்ணீர் கொட்டுவது
இவை எல்லாமே அடுக்கு தும்மலால் ஏற்படும் தொந்தரவுகள் ஆகும் .
கண்கள் சிவத்து போதல் வாய் வறட்சி அடைந்து விடுவது காதுகளில் தேவையற்ற இரைச்சல் ஏற்படுவது போன்ற தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

Tuesday, 14 July 2020

ஆளி விதைகள்' (Flax Seeds)...!

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க இதை மூன்று வாரம் குடிங்க!
 
சராசரியாக ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால். அவன் 100 டன் அளவு உணவும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் உட்கொள்கிறான்.

இதனால் நமது வாழ்நாளில் நமது குடலில் ஏறத்தாழ குறைந்தது 15 கிலோ வரை நச்சுக்கள் தங்குகின்றன. இவற்றை மொத்தமாக நாம் வெளியேற்றுவதே கிடையாது.

இவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாத நச்சுக்களால் உடலில் முதலில் சேதமடைவது இரத்தம் தான்.

Friday, 12 June 2020

அத்திப்பழம்

அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் .

அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து!!!

நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.
 நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை

சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து

இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்

தேன் இஞ்சி செய்முறை

இஞ்சியை அதன் மேல் தோலை நீக்கி விட்டு ஒரு முறைக்கு மூன்று முறை சுத்தமான நீரில் நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இஞ்சி உள்ள அளவில் பாதி அளவு தேனில் போட்டு 21 நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும்  .பின்பு அதனை எடுத்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு தினந்தோறும் ஒரு ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து காலை மாலை வாயில் போட்டு மென்று தின்றால் பித்த கிறுகிறுப்பு ,

நெஞ்சு சளி

நெஞ்சு சளி மற்றும் கபம் கரைந்து வெளியேற மிக எளிய வைத்தியம் துளசி இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதன் சாரு தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள் அதே அளவுக்கு கல்கண்டு இவை இரண்டும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நீர்விட்டு காய்ச்ச வேண்டும் இளம் தீயாக காய்ச்சி

Tuesday, 9 June 2020

கீரையின் பயன்கள் !!!

👉 நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம்.

👉 அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான்.

👉 பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றினால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

👉 இதனை தவிர்க்க நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரைகளை வளர்க்கலாம்.

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )

உடலை வலுவூட்டக்கூடிய மூன்று வகை களி!

நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு.

இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது.
ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவுமுறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள்.

சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற ஆரம்பித்திருக்கிறார்கள்.

Wednesday, 27 May 2020

கிஷ்கிந்தா மலை

ராமாயணத்தில் குறிப்பிடக்கூடிய கிஷ்கிந்தா மலை இதுதான். துங்கபத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அனுமன் பிறந்த இடமாகக் கருதப் படக் கூடிய கிஷ்கிந்தா. ஹம்பி, கர்நாடகா


சில கோயில்களின் சிறப்புகள்

1. சிதம்பரம் நடராஜர் கோயில் உற்சவர் அல்லாமல் மூலவரே வீதியில் வலம் வருகிறார்..!
2. திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் காய்க்கும் காய்கள் லிங்க வடிவில் இருக்கின்றன...!!

3. கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒவ்வொரு நாளும் ஐந்து முறை வெவ்வேறு நிறங்களில் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்கிற சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகிறார்.


ஸ்ரீ வாஸ்தீஸ்வரர்

ஸ்ரீ வாஸ்து ஈஸ்வரரை வணங்கி வீடு கட்டுங்கள் நலம் உண்டாகும். ஸ்தலம் அமைந்துள்ள இடம் : அருள்மிகு ஸ்ரீ வாஸ்தீஸ்வரர் ஆலயம், அகரம் கிராமம், சுக்காம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் ( தாடிக்கொம்பு அருகாமையில் )


கண்ணப்பர்மலை, காளஹஸ்தி.

இறைவனுக்கே கண் கொடுத்த கண்ணப்பர், நாயனார் ஆவதற்கு காரணமாகிய அவரால் வணங்கப்பட்ட லிங்கம் இதுதான்!!- கண்ணப்பர்மலை, காளஹஸ்தி.



அகத்தியர் அறிவுரை

"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா.

பாவத்தை செய்தவன் சந்தோஷமாக
இருக்கிறான் என்று எண்ணாதே.

அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது.

சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன்
கூட்டியே அறிவார்கள்.

மனித இயக்கத்தின் ஏழு ஆற்றல் சக்கரங்கள்

1. மூலாதாரம்:-

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.

உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.

உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

Sunday, 17 May 2020

தமிழ் மாதமும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அடைமொழியும்

 பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.

தமிழ் மாதமும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அடைமொழியும்
பைரவர்

பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.

யார் சித்தன் ? சித்தர் நிலை பற்றி...!

1. முயற்சி திருவினையாக்கும்.
2. பயிற்சி, முயற்சி செய் திருவினையாக்கும்.
3 சிவ சத்தி யோகப்பயிற்சி செய் திருவினையாக்கும்.
4 சிவ சத்தி பயிற்சியில்தான் மனம் என்ற வாசி அடங்கும்.
5 வாசி வசமானால் காயம் சுத்தி ஆகும்.
6 காயம் சுத்தியானால் மனம் என்ற மூலம் அடங்கும்.
7 மனம் என்ற மூலம் அடங்கினால், முத்தி சித்தி பெறலாம்.
8 சிவ சத்தி பயிற்சியில்தான் மனம் என்ற மூலம் அடங்கும்.
9 மூலம் என்ற மனம் அடங்கி காயம் சுத்தியானால், ஞானம் என்ற இறையை காணலாம்.
10 இறை என்ற சீவன் சிவனை அறியும்.
11 சிவனை அறிந்தால் ரசவாதம் சித்திக்கும்.
12 ரசவாதம் சித்தியானால் பிறப்பு, இறப்பு தவிர்க்கலாம்.
13 ரசவாதம் தெரிந்தால் சித்தன்.
14 சித்தன் தான் சிவபெருமான்.
15 சித்தன் தான் மரணமென்ற பெருநோய்யை தீர்க்க முடியும்.
16 மரணமில்லாத பெரு வாழ்வு வாழ்வதுவே சித்தர் நிலை.
17 சித்தர் நிலையில் தான், "நான் தான் அவன்", "அவன் தான் நான்" என்று சொல்ல முடியும்.

மூர்த்தங்கள்

சிவபெருமானின் வடிவங்களை ‘மூர்த்தங்கள்’ என்றும் கூறுவார்கள். சிவபெருமான் 64 வடிவங்கள் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என்கிற 5 முகங்களில் இருந்து இந்த வடிவங்களை அவர் எடுத்தார். இந்த 64 வடிவங்களில் 25 வடிவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதில்அகோர முகத்தில் இருந்து தோன்றிய 5 வடிவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தட்சிணாமூர்த்தி

சிவாலயங்கள் அனைத்திலும் தென்திசை நோக்கி இடம்பெற்றிருப் பவர் தட்சிணாமூர்த்தி. இவரை ‘தென் முகக் கடவுள்’ என்றும் அழைப்பார்கள். கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, சனகாதி முனிவர்கள் நால்வருக்கு ஞான உபதேசம் அளிக்கும் திருக்கோலம் இவருடையது. இதனால் அவரை ‘குரு’ என்று போற்றுவார்கள். மயிலாடுதுறை, ஆலங்குடி, திருப்பூந்துருத்தி போன்ற ஆலயங்களில் தட்சிணாமூர்த்திக்கு அழகான வடிவங்கள் இருப்பதைக் காண முடியும்.

வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேசுவரர் ஆலயம்

வேலூர் மாநகரின் மையப் பகுதியில் 136 ஏக்கர் பரப்பளவில் அகழியுடன் அமைந்துள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது அருள்மிகு ஜலகண்டேசுவரர் ஆலயம்.

தல வரலாறு :

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசிஷ்டர், அகத்தியர், கௌதமர், பரத்துவாஜர், வால்மீகி, காசிபர் அத்திரியார் ஆகிய சப்தரிஷிகள் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பகவதி மலையில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தனர்.

பின்னர் அத்திரியர் மட்டும் வேலூரில் வழிபட்டு வந்தார்.

கொடிமர பூசை - திருச்செந்தூர்

கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?

திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்
 மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின்  கொடிமரத்துக்குத்தான்
பூஜை நடைபெறும் .

இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற
சந்தன மரமாகும்

இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.

Wednesday, 13 May 2020

மூலிகை காபி செய்முறை..!

காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என
அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல்
உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை.

தேவையான மூலிகை பொருட்கள்:

1 – ஏலரிசி – 25-கிராம்.
2 – வால்மிளகு – 50 கிராம்.
3 – சீரகம் – 100 கிராம்.
4 – மிளகு – 200 கிராம்.

Monday, 11 May 2020

வாய்வு பிடிப்பு

முடக்கற்றான் கீரை ......... ஒரு கைப்பிடி
மர மஞ்சள்  ............ ஐந்து கிராம்
கிராம்பு  ............. இரண்டு கிராம்
சீரகம் ................ இரண்டு கிராம்
சுக்கு    ..........  இரண்டு கிராம்

நாட்டு மருத்துவம்

1). மருத்துவ மறை பொருள் தெளிவு...🌺

 திரிகடுகு - சுக்கு, மிளகு, திப்பிலி

திரிபலை - கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல்

திரிகந்தம் - சந்தனம், அகிற்கட்டை, தேவதாரு

திரிபத்திரி - லவங்கபத்திரி, சாதிபத்திரி, தாளிசபத்திரி

முக்காலம் - காலை, உச்சி, மாலை

திரிதோஷம் - வாதம், பித்தம், சிலேத்துமம்

முப்பழம் - மா, பலா, வாழை

கண்

கண்வலி குறைய:

1.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
2.கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
3.புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.
4.பருப்பை வேகவைத்து அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து சாப்பிட்டால் கண்வலி குறையும்.

Pain Killer (வலி நிவாரணி)

Pain Killer (வலி நிவாரணி) ஓர் உயிர் கொல்லி... நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்???

அனைத்து வகையான வலிகளுக்கும் நாம் தேடி அலைவது வலி நிவாரண மாத்திரைகளைத்தான்.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கல்லீரல்,குடல்,கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உடனடி மரணம்தான்..

தலைவலி,பல்வலி,கால்வலி,மூட்டுவலி,இடுப்புவலி,கழுத்து வலி,பிடரிவலி,வயிற்று வலி,குதிங்கால்வலி,ஆடுசதைவலி,மணிக்கட்டுவலி,கண்வலி,இப்படி உடலில் எந்தப்பகுதியில் வலி இருந்தாலும் இனிமேல் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டாம்.

சுண்டைக்காய் மருத்துவக் குணங்கள்

உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

வில்வ இலைக் கசாயம்

வயிறு சம்பந்தப் பட்ட நிறைய பிரச்சினைகளைக் குறைக்கக் கூடிய, பசி இன்மையை நீக்கக் கூடிய, செரிமானக் கோளாறுகளை  நீக்கக் கூடிய, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, மிக சிறந்த எளிய மருந்து.
 மால் அப்சர்ப்சன் சிண்ட்ரோம் பிரச்சினைக்கு தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம் .

சுக்கு ..................  இரண்டு கிராம்
நிலவேம்பு ..................  இரண்டு கிராம்
நாயுருவி ..................  இரண்டு கிராம்
மூக்கிரட்டை ..................  இரண்டு கிராம்
வில்வ இலை .. ..................  இரண்டு கிராம்

மின்ட் துளசி இலை

மின்ட் துளசி இலைகளை
அரைத்து எடுத்த விழுது கொட்டைப் பாக்கு அளவு அல்லது முப்பது மில்லி சாறு சாப்பிட அல்சர் என்ற வயிற்று வலி குணமாகும்
வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையைக் குறைத்து செரிமானத்தை சரி செய்யும்
சிலருக்கு தொண்டையில் இருந்து வயிறு வரை நெருப்பு போல ஒரு எரிச்சல் தோன்றும்
GERD பிரச்சினைக்கு சிறுநீரகக் கோளாறுகளை பின் விளைவுகளாக ஏற்படுத்தும் பாண்டாசிட் போன்ற மருந்துகளையே நாட வேண்டி இருக்கிறது

சீத்தாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?

சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும்  மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். இதன் இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.


தினமும் வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!

பச்சை வெங்காயத்தை சிறிதளவு தினமும் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது

வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது. பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது.


முருங்கையில் மதிப்புக்கூட்டப்பட்ட பால்

நம் நாட்டில் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் முருங்கை மரம் ஓர் குடும்ப உறுப்பினர் போல் உள்ளது. முருங்கையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருப்பதால் சத்து பற்றாக்குறையை நிர்வர்த்தி செய்ய உதவுகிறது.  இந்தியாவில் மட்டும் சுமார் 375 மில்லியன் குழந்தைகள் சத்துப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சத்துப்பற்றாக்குறை நோய் வராமல் தடுக்கவும் வந்தபின் குணப்படுத்தவும் உணவில் உள்ள சத்துக்களே சிறந்தது.  முருங்கையானது 300 வகையான நோய்கள் வராமல் தடுப்பதுடன் 67 வகை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. முருங்கையில் 90 வகையான சத்துக்களும் 46

ஆரம்ப‌ம் அக்னி 🌞நட்சத்திரம்

கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

`அக்னி நட்சத்திரம்’ என்னும் கத்தரி வெயில் இன்று (4-ம் தேதி) தொடங்கி இம்மாதம் 29-ம் தேதி வரை நீடிக்கிறது. ஏற்கெனவே வெயில் சுட்டெரித்துவரும் சூழலில், அக்னி நட்சத்திரத்தை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பதே பெரும்பாலானோரின் அச்சமாக இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொதிக்கிறது. ‘ஃபானி’ புயல் காரணமாக, மழை பெய்து வெப்பம் தணியும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போய்விட்டது. போதாக்குறைக்கு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்குத் திசைமாறிப்போன ‘ஃபானி’ புயல் நிலத்திலிருந்த ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்றுவிட்டது.

தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் குறிப்பினை தெரிந்து கொள்வதற்கு முன் தலையில் ஏன் நீர் கோர்க்கிறது என்பதன் காரணங்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

தலையில் ஏன் நீர் கோர்க்கிறது?

உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பது, அல்லது அதிகமாக வேலை செய்வது, மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறையை செய்யாமல் இருப்பது, இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்வது, தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருப்பது ஆகிய காரணங்களால் நம் தலையில் நீர்கோர்த்து கொள்ளும்.

எலுமிச்சை

எலுமிச்சை - எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி
மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.

ரோஜா இதழ் கசாயம்

சர்க்கரை நோய் என்றால் என்ன ?
சாப்பிடுகின்ற உணவில் இருக்கும் சத்துகள்,
 உடலுக்கு தேவைப் படும்போது பயன்படுத்தப் படுவதற்காக
கொழுப்பு அமிலங்களாக சேமிக்கப் படுகின்றன.
எப்போது எல்லாம் உடலுக்கு தேவையோ அப்போதெல்லாம் இந்த கொழுப்பு அமிலங்கள் உடைக்கப் பட்டு,
சத்து எடுக்கப் பட்டு ,
உடலின் இயக்கத்திற்கு பயன்படுத்தப் படுகிறது.
கொழுப்பாக சக்தியாக சேர்க்கப்பட்ட பொருட்கள்,  உடலில் சேராமல், உடலை விட்டு சிறுநீரில் வெளியேறுவதுதான் நீரிழிவு நோய் ஆகும்
உடலுக்கு தேவையான சக்திகளை சேர்த்து வைக்க முடியாமல், உடலை விட்டு வெளியேறுவதுதான், இந்த மோசமான சர்க்கரை நோய் ஆகும்

சிற்றாமுட்டி – மருத்துவ பயன்கள்!

சிற்றாமுட்டி முழுத்தாவரம் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வறட்சியகற்றும்; பாரிசவாயு போன்ற கடுமையான வாதநோய்களைக் கட்டுப்படுத்தும். வீக்கத்தைக் கரைக்கும்; ஆறாத புண்களை குணமாக்கும். தலை, உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தைலவகைகளில் இது சேர்கின்றது.

1.5 மீ. வரை உயரமாக வளரும் சிறு செடி வகைத் தாவரம். சிறு கிளைகளில் ஒட்டும் இயல்புடைய மெல்லிய உரோமங்கள் காணப்படும். பல்லுள்ள 3 சிறு மடலான இலைகள், முட்டை வடிவமானவை.

மலர்கள், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறம், காய்கள், உருண்டை வடிவமானவை. விதைகள், மென் உரோமங்கள் கொண்டவை. இலங்கை, அந்தமான் தீவுகளில் இயற்கையில் ஏராளமாக விளைகின்றது. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது.

பெண் மலடு நீங்க பாரம்பரிய மருத்துவம்

 கீழாநெல்லி செடி  ...........  ஒன்று
அரச இலை ................  ஒன்று
சீரகம் ...........  அரை தேக்கரண்டி

இதய அடைப்பு நீங்க பாரம்பரிய மருத்துவம்

வில்வ இலை ............  ஐந்து
வெண்தாமரைப் பூ  இதழ்கள் ........... ஒரு பூ
மிளகு ..............  ஐந்து எண்ணம்
சீரகம் ..............  கால் தேக்கரண்டி
ஆகிய நான்கு பொருட்களையும் இருநூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி நூறு மில்லியாக சுருக்கி பனை வெல்லம் தேவையான அளவு சேர்த்துக் கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் குடித்து வர இதய அடைப்பு நீங்கும்

வயிறு உப்புசம் சரியாக பாரம்பரிய மருத்துவம்

ஓமம் ................. அரை தேக்கரண்டி
மிளகு ...........  மூன்று எண்ணம்
திப்பிலி  ...........  மூன்று எண்ணம்
ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து அரைத்து தூளாக்கி எடுக்கவும்
ஒரு சிவப்பு கொய்யாப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி சிறிது தேன் கலந்து கிளறி சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்
காற்று பிரியும் மலம் கழியும் வயிறு உப்புசம் சரியாகும்

பேதி மருத்துவம்

"அடர் நான்கு மதிக் கொருகால் நுகர்வோம்" என சித்தர் பாடல் (பதார்த்த குண சிந்தாமணி) கூறுகின்றது.

உடலில் தங்கும் கழிவுகள், குடலில் நாட்பட தங்கும் கழிவுகள், விடத்தன்மையுடைய பொருட்கள் போன்றவற்றை நீக்குவதற்காக 4 மாதங்களுக் கொருமுறை பேதி மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும்.

எப்படி மேற்கொள்ள வேண்டும் ?

பேதி மருத்துவம் செய்ய ஏற்ற நாளினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காலை முதல் மதியம் வரை அதிகமாகக் கழியும் சில வேலை வாந்தியும் வியர்வையும் உண்டாகும்.

இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?

தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது அனைவரும் அறிந்ததே.


குறிப்பாக தேன் சளியை எதிர்த்துப் போராடவும், சருமத்திற்கு ஈரப்பதமூட்டவும் பயன் படுத்தப்படுகிறது.

ஆனால் தேனைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. தேனை ஒரு சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும்.

Saturday, 9 May 2020

கர்ம வினை தீர்க்கும் வைரவன் கோவில் - தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பைரவரின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கர்ம வினை தீர்க்கும் வைரவன் கோவில் - தஞ்சாவூர்

தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார்.

‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள்.

வழியில் வைரவன் கோவில் என்னும் தலம் வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.

Friday, 8 May 2020

சிவன் மேல் காதல் கொண்ட தாட்சாயிணி

🙏சிவபுராணம்..!
🙏 பிரஜாபதியில் ஒருவரான தட்சப் பிரஜாபதிக்கும், பிரசுதிக்கும் மொத்தம் அறுபது பெண் புத்திரிகள் பிறந்தனர் என வேதங்கள் கூறுகின்றன. அதில் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயிணி, ரதி, ரேவதி மற்றும் கார்த்திகை உட்பட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இவர்களின் புத்திரிகள் ஆவார்கள்.

தட்சப் பிரஜாபதி தன்னுடைய அறுபது புத்திரிகளில் பதின்மூன்று புத்திரிகளை காசிப முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களின் சந்ததிகளால் உலகத்தில் உள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

பின்பு தனது மகள்களில் இருபத்தி ஏழு பேரை சோமனுக்கு மனம் முடித்து கொடுத்தார். தட்சப் பிரஜாபதி தான் ஏற்ற பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தார். இந்த பிரஜாபதி என்னும் பதவியால் அவர் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒரு நெறிமுறைப்படுத்தி அவர்களை நிறைவுடன் வாழ வழி வகை செய்தார்.

20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்

இரட்டை சிவாலயம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து 4 கி.மீ. மேற்கே, ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில் மாம்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு வருபவர்களை வாவென்று அழைப்பதைப் போன்று, அண்ணாமலையார் மற்றும் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என இரட்டை சிவாலயம் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது.

ஆலய தரிசனம் ஆயிரம் புண்ணியம் என்பார்கள். அதேபோல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆம், இராஜகோபுர திருப்பணியை எதிர்நோக்கி இருக்கும். இத்திருத்தலம் சுமார் 2.85 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் இவ்வளவு பயனா?

சைவத்தின் மாமந்திரம் நமசிவாய எனும்

ஐந்தெழுக்கள் மட்டுமே. சிவ வழிபாட்டில் திருநீறும் ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க நமசிவாய எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.

நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில்
‘ந’ என்பது திரோதான சக்தியையும்,
‘ம’ என்பது ஆணவமலத்தையும்,
‘சி’ என்பது சிவத்தையும்,
‘வா’ என்பது திருவருள் சக்தியையும்,
‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரம்
நமசிவாய.

மறுபிறவியில்லாதநிலைக்குஉயத்தும்சிவதலம்!

தேப்பெருமாநல்லூர் கும்பகோணம்
           

சிவபெருமானும், பார்வதி தேவியும் பூலோக மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக, பூலோகம் வந்திருந்தனர். மறுநாள் இறைவனைச் சனி பகவான் பிடிப்பதற்கான நேரமாக இருந்ததால், சனி பகவானும் அவர்களைப் பின் தொடர்ந்து பூலோகம் வந்திருந்தார்.

இதையறிந்த பார்வதி தேவி சனியிடம், ‘சனி பகவானே! ஏன் எங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறாய் ?’ என்றார்.

உடனே சனி, ‘அன்னையே! நான் இறைவனைப் பிடிப்பதற்கான நேரம் வந்து விட்டது. நாளை காலை ஏழே கால் நாழிகைப் பொழுது மட்டும், அவரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன்’ என்றார்.

அட்சய திருதியை பற்றி 60 சிறப்பு தகவல்கள்

1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

துன்பத்திற்கான மருந்து எது..?

துன்பத்தில் வருந்துகின்ற
ஜீவன் ஒருவன் வருந்துகின்ற
வேளையில் அத்துன்பத்திற்கு
ஆதியையோ அந்தத்தையோ காணாதவனாக இருக்கிறான்.
அந்த நிலையைத்தான்
‘மருண்ட நிலை’ என்கிறோம்..

பிறவிப் பிணியின் கொடுமையை உலகப்பற்றுடையவன் அறிந்து
கொள்வதில்லை.

ஒட்டகத்தின் நிலையில்
அவன் இருக்கிறான். முள்செடியைத்
தின்று அதன் உதட்டில் ரத்தம் வடியும். ஆயினும் முட்செடியைத் தின்பதை  ஒட்டகம் நிறுத்துவதில்லை.

சகுனி

தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,

 இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.

இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.

கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.

ராமானுஜர்

நிச்சயம் அவர் ஒரு மகான், சைவத்துக்கு ஆதிசங்கரர் போல வைணவத்துக்கு அவர் செய்திருக்கும் சேவை பல ஆயிரம் வருடங்களுக்கு போதுமானது.

அந்த காலம் கொஞ்சம் குழப்பமானது, ராஜேந்திர சோழனுக்கு பின் சோழ அரசு வலுவிழந்திருந்தது. சைவத்தின் காவலான சோழ அரசு வீழும் பொழுது பவுத்தம் மறுபடி தளைக்க முழு பலத்தோடு முயன்றுகொண்டிருந்தது

பவுத்தம் இக்கால கிறிஸ்தவ மிஷனரிகளின் முன்னோடி, நிலையற்ற அரசும் குழப்பமான மக்களும் நிறைந்த இடத்தில் அது கால்பதிக்கும்,

அடிதட்டு மக்களை சாதி, சமூக அமைப்பினை சொல்லி மெல்ல மடைமாற்றும்,

மஹான் ஸ்ரீ ராமானுஜர்

மதத்தில் புரட்சி செய்த மஹான் ஸ்ரீ ராமானுஜர் . ஸ்ரீ ராமானுஜர் உதித்து இருக்காவிட்டால் ஸ்ரீ வைணவ தர்மத்தை காப்பாற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.                                                       ராமானுஜர்  காஞ்சிபுரம் அருகில் ஸ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு திருவாதிரை நட்சத்திர நாளன்று பிறந்தார். இவர் லட்சுமணன், பலராமன் ஆக அவதரித்த ஆதிசேஷன் தான் கலி யுகத்தில் ஸ்ரீ ராமானுஜர் ஆக பிறந்தார். ராமானுஜர்  ஆதி சேஷன் அவதாரம்.ராமானுஜர்   அசூரி கேசவ சோமயாஜி மற்றும் காந்திமதி அம்மையார் பெற்றோர்களுக்கு   மகனாக பிறந்தார். இவர் ஆதிசேஷன் அம்சமாக பிறந்ததால் இளையாழ்வார் என்று அழைக்கப்பட்டார். ராமானுஜர் என்றால் ராமனுக்கு தம்பி என்று அர்த்தம். ஆக ஸ்ரீ ராமானுஜர் உரிய வயதில் தன் தந்தையிடம் வேதங்கள் கற்று கொண்டார். அதன் பிறகு அத்வைத வழியில் இருந்த யாதவ பிரகாசரிடம் கல்வி கற்க சேர்ந்தார். அவர் ராமானுஜரின் வேதாந்த அறிவு கண்டு மலைத்து போய், இந்த ராமானுஜன் தன் வழிமுறைக்கு மாற்றாக பரம்பொருளுக்கு விளக்கம் அளிப்பதை ஏற்றுக்கொள்ளாதவாராய் ஸ்ரீ ராமானுஜரை  கொல்ல சதி திட்டம் தீட்டியதை தன் உடன் பயிலும் சித்தி மகன் கோவிந்தன் துணையுடன் அறிந்து, ஸ்ரீ ராமானுஜர் உயிர் தப்பி  எம்பெருமான் மற்றும் தாயாரின் வேட்டுவ வேடத்தில் வந்து உதவிய காரணத்தால் காஞ்சி மாநகர் வந்து அடைகிறார்.                                                           பின்னர் யாதவபிரகாசர் கங்கை கரையில் இருந்து  கஞ்சிபுரம் வந்து  பார்க்கையில் அங்கு ஸ்ரீ ராமானுஜர் இருப்பது கண்டு திகைத்து போய் நிற்கிறார். பின்னர், யாதவ பிரகாசர் மனம் வருந்தி திருத்தம் பெறுகிறார்.               அந்நாட்களில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுடன் நேரடியாக பேசி வந்த மிகப்பெரிய மஹானாக விளங்கி வந்தவர் திருகச்சி நம்பிகள். அவர்தான் ஸ்ரீ ராமானுஜருக்கு  முதல் குரு ஆவார். ஸ்ரீ ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை தன்  வீட்டுக்கு வந்து எழுந்தருள வேண்டும் என்று  வேண்டி கேட்டு

வேங்கடவனுக்கு மட்டும் ஏன் நேத்திரத்தை மூடிய பெரிய திருமண்?

1. நாம் பெருமாளை நோக்கி சேவிக்க நேராகச் செல்லும் போது நாம் செய்த பாவங்கள் எல்லாம்  பகவான் கண்ணுக்குத் தெரிகின்றது.
இவனுக்கு என தண்டனை தரலாம் என
பக்கத்தில் இருக்கும்
ஶ்ரீதேவி நாச்சியாரைப்
பார்த்ததும் உடனே
அவள் இந்த ஜீவன் இங்கு வந்து விட்டான்,  எனவே
இவனுக்கு அருள் தான் செய்ய வேண்டும் என  வாதாடுகிறாள்.

2. உடனே பகவான்
மறு புறம் திரும்பினால்
பொறுமையே வடிவான
பூதேவி நாச்சியார்
இந்த ஜீவன் நம் குழந்தை, அவன் தவறே செய்யவில்லை என வாதிட்டு அவன் கோபக் கனலை தணித்து விடுகிறாள்

அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர், குலம், நாடு, பூசை நாள்

1 ) அதிபத்தர்
பரதவர் 
சோழ நாடு
ஆவணி ஆயில்யம்

2)  அப்பூதியடிகள்

அந்தணர்
 சோழ நாடு
தை சதயம்

3 ) அமர்நீதி நாயனார்
வணிகர்
சோழ நாடு
ஆனி பூரம்

கர்ம வினை

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக் கணக்கு. 

ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக
அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.

கங்கா_மாதா

கங்கைக் கரையின் ஓரம் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன்.

தினமும் கங்கா மாதாவை தூரமாக இருந்து கண்ணால் பார்த்து வணங்குவ
தோடு சரி.

தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த மனிதரை தீண்டினால் புனிதம் கெடுமாம்.

இப்படியெல்லாம் இருந்த காலத்தில்.

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

சனி பகவானின் வாத நோய் தீர்த்த புண்ணியஸ்தலம்

 
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், திருமறைநாதர் ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள். இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை

கோவில்களுக்கு நீங்கள்செல்லலாமா செல்லவேண்டாமா

இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்...!!

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

நீங்கள் தினமும் 108, 1008,10008, 100008,1000008 முறை

*திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய

* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ

*திரு எட்டெழுத்து என்னும்  அஷ்டாட்சரம்
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய

நாமம் சொல்லி ஜபம் செய்தீர்கள் என்றால் அந்தமணி நேரங்களில்

1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .

2. நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .

3. ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.

4.  நீங்கள் மரணம் என்கிற பரிட்சைக்குத் தயார் செய்தீர்கள் என்று ஆகிறது.

ஒருவருக்கு கெடுதல் வரப்போகிறது, என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?

சில பேர் கஷ்டத்தை நன்றாக அனுபவித்த பின்பு, தங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய், ஜோதிடரிடம் காட்டி, கெட்ட நேரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பின்புதான் நமக்கு ஏதோ ஒரு செய்வினை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். இதையெல்லாம் கஷ்டத்தை அனுபவித்த பின்பு தான் நாம் உணர்வோம். ஆனால் கஷ்டம் வருவதற்கு முன்பாகவே, சில அறிகுறிகள் மூலம், நமக்கு ஏதோ ஒரு கெடுதல் நடக்கப்போவது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது எவரையும் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படக் கூடிய விஷயம் அல்ல. பிரச்சனை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?

அறிவியல் பூர்வமான விளக்கம்...

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

செவ்வாய் பகவான்

ஜனன ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசியில் வீரன், தீரன், சூரன், சகோதர காரன் என்று அழைக்கபடும் செவ்வாய் பகவான்  இருக்க அல்லது லக்னம் மற்றும் ராசியை செவ்வாய் பகவான் பார்க்க பிறந்த ஜாதகருக்கு முன்கோபம் அதிகம் இருக்கும்.. ஜாதகர் அவசரக்காரர்...ஜாதகருக்கு பாசம் அதிகம் இருக்கும்..ஜாதகருக்கு போராட்ட குணம் இருக்கும்.. ஜாதகருக்கு சகோதர பாசம் இருக்கும்.. ஜாதகருக்கு பிடிவாத குணம் இருக்கும்.. ஜாதகருக்கு வயதான பிறகு பெரும்பாலும் இரத்த கொதிப்பு ஏற்படும்...ஜாதகருக்கு பூமி லாபம் உண்டு... ஜாதகரின் பெயரில் பெரும்பாலும் வீடு, மனன, நிலம் போன்றவை இருக்கும்.. ஜாதகர் காரமான உணவு மற்றும் மசாலா

மனம் அலை பாய்தல் - ஸ்ரீரமண மகரிஷி

ரமண மகரிஷியிடம் பக்தர் ஒருவர் தனது சந்தேகத்தைக் கேட்க வந்தார்.

அப்பொழுது ரமணர் அணில் குட்டிகள் சிலவற்றிற்கு பஞ்சால் நனைத்து பால் புகட்டிக்கொண்டிருந்தார்...

அவற்றின் வயிறு நிறைந்தவுடன் ஒரு கூடையில் பஞ்சை நிரப்பி மெத்தென்று அதன் மேல் படுக்க வைத்தார்...

சற்றுநேரம் படுத்த குட்டிகளில் ஒன்று குதித்து அங்கும் இங்கும் ஓடியது...

அதை மறுபடியும் பிடித்துப் போட்டார்...

கர்ம பலன்

எல்லா முயற்சிகளுக்கும் அவற்றிற்குரிய கர்ம பலன் கண்டிப்பாக உண்டு.
அந்த கர்ம பலன், நாம் நினைக்கும் விதத்திலோ, நாம் எதிர்பார்க்கும் விதத்திலோ, நாம் ஆசைப்படும் விதத்திலோ (அது எவ்வளவு நியாயமாக, தர்மமாக இருந்தாலும் சரி) நடக்கவேண்டும் என்பது இல்லை என்பது தான் விஷயம்! அந்தப் பலன் இறைவனின் இச்சைப் படியே வந்து சேர்கிறது என்பது தான் விஷயம்.
ஆக, பலனைப் பற்றிய முன் ஆராய்ச்சிகளை, எதிர்பார்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு உன் கர்மத்தைச் செய் என்பது தான் கர்ம யோகம் காட்டும் வழி. இதில் பக்தியையும் கலந்தால், "எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்" அல்லது "அவரது ஒரு கருவியாகச் செய்", "பலனை அவர் திருவடியில் ஒப்புவித்துவிடு" என்றெல்லாம் சேர்த்து சொல்லலாம்.
ஐயா, ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் என்னால் கர்மம் செய்ய முடியவில்லையே என்கிறீர்களா?
அப்படியானால், உங்கள் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டே கர்மம் செய்யுங்கள். தவறில்லை. ஆனால் 'எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பது என்னை விட என் இறைவனுக்கு நன்றாகத் தெரியும்' என்கிற அடிப்படை நம்பிக்கையும் உங்களுக்கு வேண்டும். அது கூட இல்லை என்றால், இறைவன் என்னும் மேலான சக்தியை நீங்கள் நம்பவேண்டியதே இல்லையே! அதனால்,

எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் அது தான் இறைவன் இச்சை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாய் பலன் வந்தால் அது இறைவன் இச்சை என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

பாதி சாதகம், பாதி பாதகம் என்று வந்தால் அது இறைவன் இச்சை என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

முற்றிலும் உங்களுக்கு சாதகமாக வந்தால் அது இறைவன் இச்சையால் தான் நடந்தது ( என் சாமர்த்தியத்தால் இல்லை) என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

இறைவனே எல்லாம் தருகிறார் என்றால் நான் ஏன் முயலவேண்டும் என்கிறீர்களா?
அந்த நம்பிக்கை 100 சதவீதம் ஒரு ஆளுக்கு வந்துவிட்டால் அவனுக்கு செய்யவேண்டிய கர்மம் ஒன்றும் இல்லை. அவன் கர்மத் துறவி. அவன் 'நான் கர்த்தா' என்கிற உணர்வைப் பூரணமாகத் துறந்தவன். அப்படியே அவன் கர்மம்/ முயற்சி ஏதும் செய்வதாக அடுத்தவர்க்குத் தோன்றினாலும் அவனுக்குத் தெரியும் தான் செய்யவில்லை. எல்லாம் தானே நடக்கிறது என்று.
அவ்வளவு தான் 

தென்னாடுடைய சிவனே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பது மாணிக்கவாசகரின் அருள்வாசகம். விஸ்வேஸ்வரன் சர்வேஸ்வரன் என்ற திருப்பெயர்கள் உலகத்துக்கெல்லாம் இறைவனாக, எல்லோருக்கும் கடவுளாக சிவனே விளங்குவதை வலியுறுத்துகின்றன.

பாரத நாடு ஜம்புத் தீவின் ஒரு பகுதி என்று வடமொழி ஸ்லோகம் கூறுகிறது. 'ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே - பரதக் கண்டே...’ நான் ஒருமுறை மார்கழி மாதம் பற்றிய பதிலில் ஒரு வீடியோவில் அந்த பெண் குழந்தை சொல்லும் வார்த்தைகள்.

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?

பாண்டு உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.

பாண்டவர்களும் அவர்களது தந்நதை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது

நுட்பவியல் கலைச் சொற்கள்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

⭕ WhatsApp      -       புலனம்
⭕ youtube          -       வலையொளி
⭕ Instagram       -       படவரி
⭕ WeChat          -        அளாவி
⭕ Messanger     -        பற்றியம்

முருகப்பெருமானை பற்றிய முருகான (அழகான) தகவல்கள்

முருகப்பெருமானை பற்றிய முருகான (அழகான) தகவல்கள்:

முதன்முதலில் மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வு அடைந்த முதல்சித்தன் , தலைமைக்கடவுள்  ஆதிஞானகுரு முருகப்பெருமான் .

1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.

2. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் மற்றும் உலகம் முழுதும் பல நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

3. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

நமசிவய வந்தது எப்படி?

ந ம சி வ ய= 51
எப்படி?
தமிழில் மெய் எழுத்துகள் 18
அதில்
எட்டாம் எழுத்து ந்
பத்தாம் எழுத்து ம்
மூன்றாம் எழுத்து ச்
பதினான்காம் எழுத்து வ்
பதினொன்றாம் எழுத்து ய்

8+10+3+14+11=46

மதுரையில் கால் மாற்றி ஆடிய நடராஜர் - வெள்ளியம்பலம்

நடராஜ பெருமான் வலக் காலை உயர்த்தி நடனமாடிய இடம் எது? மதுரை - மீனாட்சியம்மன் கோவில் - வெள்ளியம்பலம் - வெள்ளி சபை(இரஜித சபை) - இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘சந்தியா தாண்டவம்’ எனப்படுகிறது.

சிவ பெருமான் நடனக் கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள சிவஸ்த்தலங்களுள் முக்கியமானது ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவ பெருமானின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன. இந்த 5 தலங்கள் பஞ்ச சபை/ஐம்பெரும் அம்பலங்கள், ஐம் பெரும் சபைகள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்று அழைக்க படுகின்றது.

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?

 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

நமச்சிவாய!!

நமச்சிவாய!!

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருந்தக்கூலி தரும்!!

திருவள்ளுவர் ஐயாவின் இத்திருக்குறளின் பொருளாக நாம் விளங்கியது தெய்வத்தால் முடியாத காரியம் என்று இருந்தாலும் தான் முயற்சி செய்தால் நடத்திமுடிக்க முடியும் என்பதாகும்..

ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் பரம்பொருள் தத்துவத்தோடு இணைந்து பொருந்திப்பார்த்தால் வேறு அர்த்தமே தரக்கூடிய நம்பிக்கை அளிக்கக்கூடிய நற்சிந்தனை முத்தாக விளங்கக்கூடிய தத்துவம் பின்வருவன..

108 லிங்க சிவாலயம்

கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள்.

ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா?

தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும்.

திருச்சிற்றம்பலம்

அருள்தரும் திருஆரூர் அல்லியம்பூங்கோதை அம்மை உடனுறை அருள்மிகு புற்றிடங்கொண்ட நாதாப் பெருமான்  திருமலரடிகள் போற்றி போற்றி!!

எம்பிரான் விறன்மிண்ட நாயனார் திருமலரடிகள் போற்றி போற்றி

ஹரஹர நமப் பார்வதிபதயே!!
ஹரஹர மகாதேவா!!

தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

இலிங்கத்திற்கான விளக்கம்

சைவ சித்தாந்தத்தைக் கற்றறியாது இலிங்கத்திற்குப் பொருள் கூற இயலாது.

சொரூப நிலையிலிருந்து உயிரின்பால் தொடக்குக் கொண்டு ஐந்தொழிலாற்ற சிவபெருமான் தடத்த நிலையில் எடுத்த தூய உருவ நிலையே இன்று நாம் காணும் மகேசுவர மூர்த்தங்களாகும்.

ஒரு பொருள் சொரூபத்திலிருந்து வேற்றொரு உருவத்திற்குப் பரிணாமம் பெற்று வருமேயானால் சொரூபம் அழிந்து விடும். இது பரிணாம கோட்பாட்டின் இலக்கணமாகும்.

புல் சாப்பிட்ட நந்தி

கல் நந்தி புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச்
 செய்ய வேண்டும் என்று ஹரதத்தர் மனமுருக வேண்டினார்.

கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.

பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவா’ என்று கத்தினான்.

தீபங்களின் வகைகள்




🌟 தூபம்

🌟 தீபம்

🌟 அலங்கார தீபம்

🌟 நாகதீபம்

🌟 விருஷ தீபம்

🌟 புருஷா மிருக தீபம்

🌟 சூலதீபம்

🌟 கமடதி (ஆமை) தீபம்

Saturday, 4 April 2020

பிரமத்தண்டு

1. பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய கடிவாயில் வைத்து தேய்க்க கடுப்பு நீங்கும்.

2.பிரம்மதண்டு இலையை சுத்தம் செய்து அதனுடன் சிறிது மஞ்சள் மற்றும் துளசி இலை சாறை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கரப்பான் மற்றும் தோல் வியாதிகள் மற்றும் புண்கள் மீது தடவி வர நல்ல குணம் காணலாம்.

பூச்சி பல் மற்றும் பல் வலி குணமாக

1.காசுக்கட்டி 100 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) .
2.பொரித்த படிகாரம் 250 கிராம்.
இவை இரண்டையும் உரலில் இட்டு நன்கு இடித்து சூரணமாக்கி கொண்டு ஒரு டீஸ்பூன் வெந்நீரில் இட்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்லில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
அதையே சாதாரண நீரில் ஒரு டீஸ்பூன் விட்டு கலக்கி வாய் கொப்பளித்து வந்தால் சொத்தைப் பல் வலி குணமாகும்.

பெருங்காயம்

பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம், மானாசியஸ், அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் பல்லாண்டுச் செடி, அபியாசேயே என்றும் அழைக்கப்படுகின்றது. இச்செடி சுற்றுவட்டத்தில் 30-40 செ.மீ இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயர வளருகின்றது.

தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன. பூக்களின் தண்டுகள் 2.5–3 மீட்டர்கள் உயரம் உள்ளன மற்றும் 10 செ.மீ கடினமாகவும் மறைவாகவும் உள்ளன.

பசைநிறைந்த கோந்தைக் கொண்டிருக்கின்ற மேற்பட்டையில் பல செல் விலகிய நாளங்கள் உள்ளன. பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் பெரிய கூட்டு குடைமஞ்சரிகளில் உற்பத்திசெய்யப்படுகின்றன. பழங்கள் நீள்வட்ட, தட்டையாக, மெல்லியதாக சிவப்பு கலந்த மண்ணிறத்தில் உள்ளன மற்றும் அவை பால் சாற்றைக் கொண்டுள்ளன.

இயற்கை வாழ்வியல் முறையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில கோட்பாடுகள்

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.
3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்

பப்பாளியின் மருத்துவ பயன்கள்

பப்பாளி வெப்பத் தன்மை கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும்; உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும். பப்பாளி பழம், கழிச்சல் உண்டாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; உடலை பலமாக்கும். பப்பாளி மர வகையைச் சார்ந்தது. நீண்ட குழல் போன்ற காம்புகளின் நுனியில் பெரிய இலைகளைக் கொண்டது. பப்பாளி மரம் முழுவதும் மென்மையானது. எளிதாக உடையக் கூடியது.
பப்பாளி இலைகள் மரத்தின் உச்சியில் மட்டும் தொகுப்பாக காணப்படும். பப்பாளி தண்டையோ, கிளைகளையோ ஒடித்தால் பால் வரும்.

ஆண், பெண் மரங்கள் தனித் தனியானவை. ஆண் பப்பாளி மரங்களில் வெள்ளை, இளம் மஞ்சள் நிறமான பூக்கள் மட்டும் கொத்தாக தொங்கும். காய்கள் இருக்காது. பெண் மரங்களில் பெரிய வெள்ளையான பூக்கள் நுனியில் தனித் தனியாக

கப(சளி) சுரங்களை( காய்ச்சல்) குணமாக

கப(சளி) சுரங்களை( காய்ச்சல்) குணமாக
*******
வேப்பம்பட்டை 5 கிராம். அரிசித்திப்பிலி  ,சுக்கு, சீந்தில் கொடி, பேய்ப்புடல், நிலவேம்பு இவை அனைத்தும் சரிவிகிதத்தில் எடுத்துக்கொண்டு இதனுடன் இரண்டு பூண்டு பற்களையும் இரண்டு மிளகையும் தட்டிப்போட்டு மூன்றில் ஒரு  பாகமாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இரண்டு வேளையும் ஆகாரத்திற்கு முன்பு அருந்திவர கப(சளி) சுரங்கள் நீங்கும்.

ஓமபொடி

ஏட்டுபிரதி முறை
நோய்களுக்கு சித்த பரிகாரம்

செய்பாகம்:
ஓமம்-20 கிராம்
மிளகு-20 கிராம்
சித்தரத்தை-10 கிராம்
திப்பிலி-5 கிராம்

மேற்கண்ட கடைசரக்குககளை தூசி போக புடைதெடுத்து தூள் செய்து திரிகடி பிரமாணம் (ஒரிரு கிராம்) எடுத்து  பருத்தி துணியில்(காட்டன் துணியில்) போட்டு பொட்டணம் போல் முடிச்சு கட்டி மூக்கில் முகர்ந்து வர

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!

இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம். தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை. ஆனால் பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

நீர் கோளை

நீர் கோளை  குணமாக
கொத்தமல்லி இலை நீர் கோழைக்கு மிகச்சிறந்த மருந்து.நீர் கோளை உடல் சூட்டினால் வருகிறது.கொத்தமல்லி இலையை அரைத்து சுறு உருண்டை சாப்பிட்டு வர குணமாகும்.

சீரணசக்தியை மேம்படுத்தும் கஷாயம்

பச்சை மிளகாய் 1
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
சீரகம் 1 சிட்டிகை
உப்பு 1 சிட்டிகை

200 மிலி தண்ணீர் சேர்த்து சூடு செய்து ஒரு நிமிடம் கொதிக்கவைக்கவும்.

வடிகட்டி,  டீ போல மிதமான சூட்டில் அருந்தவும்.

சூழ்நிலை பொறுத்து அளவை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம்.

இது சீரணத்தை தூண்டும்.
வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை நோயால் பதிக்கப்பட்டுள்ளவர்கள், மற்ற அனைவரும் இதனை அருந்தலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்களான
பால்,
வெண்ணெய்,
நெய்,
சீஸ்,
க்ரீம்
போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது .
இது கண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கிறது . எப்படியெனில் உடலில் வைட்டமின் ஏ குறைவினால்தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது .

வெயிலால் வரும் வில்லங்கம்

கோடை காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய பல பிரச்னைகளில் ஹீட் ஸ்ட்ரோக் என்கிற வெப்பத்தாக்க நோயும் ஒன்று. இந்த ஹீட் ஸ்ட்ரோக் எப்போது வருகிறது? எப்படி தவிர்ப்பது? வந்தால் சிகிச்சை என்னவென்பதைப் பற்றி மருத்துவ நிபுணர்கள் பல ஆலோசனைகளை ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு பின்பற்றுவது ஹீட்
ஸ்ட்ரோக்கில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும்.

வேப்பம்பூ மருத்துவ பயன்கள்....!!!

சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து, காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்க
ு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு.
தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.
மூன்று நோய்களுக்கு மருந்து

வாழைப்பூவின் மருத்துவ நன்மைகள்

வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.

 பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும்.

வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால்  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.

பிராண முத்திரை

உயிர்சக்தியைக்கூட்டும்_பிராண #முத்திரை

செய்முறை

விரிப்பில் அமர்ந்து சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்கம் படி அமர வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.

அடிப்படைத் தத்துவம்

சுண்டு விரல் - நீர், மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை.

Wednesday, 18 March 2020

கோகர்ணா - Gokarna, Karnataka

கோகர்ணா ஒரு பழங்கால கோயில் நகரம் மற்றும் சமஸ்கிருத ஆய்வுகளுக்கான மையம். இது கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோகர்ணன் என்றால் ”பசுவின் காது” - சிவன் ஒரு பசுவின் காதில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த நகரம் கங்காவலி மற்றும் அக்னாஷினி நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது மற்றும் கார்வார் கடற்கரையில் அரேபிய கடலால் அமைந்துள்ளது.

Must Visit Places near Bangalore

Must Visit Places near Bangalore


  1. Nandi Hills
  2. Devarayanadurga
  3. Channapatna
  4. Ramanagara
  5. Bheemeshwari
  6. Kolar
  7. Madhugiri
  8. Talakad
  9. Gokarna

விருபக்ஷ கோயில் - Virupaksha Temple, Hampi, Karnataka

விருபக்ஷ கோயில்:

ஹம்பியில் உள்ள விருபக்ஷா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து ஹம்பிக்கு செல்லும் தூரம் சுமார் 350 கி.மீ. ஹம்பி தென்னிந்தியாவில் உள்ள ஒரு கோயில் நகரமாகும், இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விருபக்ஷா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் இரண்டாம் தேவா ராயாவின் கீழ் தளபதியாக இருந்த லக்கனா தண்டேஷாவின் உதவியில் கட்டப்பட்டது.



ஹம்பி துங்கபத்ரா நதியின் கரையில் உள்ளது. ஹம்பியில் புனித யாத்திரைக்கான முக்கிய மையம் இந்த மதிப்புமிக்க கோயில். இது புனிதமான மற்றும் புனிதமான பின்வாங்கல்.

Temples in Karnataka

கர்நாடக மாநிலத்தின் மிகவும் பிரபலமான கோயில்களில்

  1. அன்னபூர்னேஷ்வரி கோயில் ஹார்னாடு, 
  2. குருவதி பசவேஸ்வரர் கோயில், 
  3. கலகேஸ்வர் சிவன் கோயில், 
  4. கட்டீல் துர்கபராமேஸ்வரி கோயில், 
  5. முருதேஸ்வரர் கோயில், அனேகண்டி, 
  6. மரிகாம்ப கோயில் சாகர்


சோயாபீன்ஸில் உள்ள மருத்துவ நன்மைகளும் பயன்களும்

சோயாபீன்ஸை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். சோயாபீன், புரதங்களின் உயர்ந்த உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. இதனை இறைச்சி புரதத்திற்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
இறைச்சியைப் போலவே, சோயாபீனும் கொழுப்பு நிறைந்திருக்கும். ஆனால் இறைச்சி போலல்லாமல், அது நிறைவுறா கொழுப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஊட்டச்சத்து அளவுகள்: புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை

டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை

கோபம் குறையும், டென்ஷன் நீங்கி, மன அமைதி ஏற்படும். தற்கொலை செய்யும் எண்ணம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல நினைவாற்றல் ஏற்படும், காக்காய் வலிப்பு, சளியால் ஏற்படும் தலைவலி, பல்வலி நீங்கும். மிகவும் சக்தி வாய்ந்த முத்திரை இது.

தெரிந்துகொள்ளுங்கள்

சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மற்றும் அரிப்பு சிரங்கு படை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு கைப்பிடி குப்பை மேனி தழை ஒரு கைப்பிடி வேப்பம் கொழுந்து ஒரு பத்து கிராம் அளவுக்கு கஸ்தூரி மஞ்சள் பொடி அதனுடன் துளசி சாறு கொஞ்சம் இவை அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் அரிப்பு இருக்கும் பொழுது சிறிது கல் உப்பை நசுக்கி இந்த பசையில்

பாதாம்

பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் நட்ஸ் தான் பாதாம். ஆனால் அந்த பாதாமை இன்னும் பலர் அப்படியே பச்சையாகத் தான் சாப்பிடுகிறார்கள். உண்மையில் பாதாமை சாப்பிடும் ஆரோக்கியமான வழி என்றால், அது ஊற வைத்து சாப்பிடுவது தான்.

ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?

பாதாமின் தோலில் டேனின்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனைத் தடுக்கும் பொருளாகும். பாதாமை நீரில் ஊற வைத்தால், அதன் தோலை எளிதில் நீக்கிவிடலாம் மற்றும் நட்ஸில் உள்ள முழு சத்துக்களையும் எளிதில் பெற முடியும்.

சைனஸ் பிரச்சனையை தீர்க்கும் பிரிதிவி முத்திரை!

பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது.

கவலைப்படாதீர்கள், இதோ பலவித பலன்கள் தரும் பிரிதிவி முத்திரை பயிற்சி செய்யுங்கள், வளமாக வாழுங்கள். பஞ்ச பூதங்களில் நிலம் என்ற பூதம் உடலில் சமஅளவில் இருந்தால் வியாதி இருக்காது. மனமும் அமைதியாக இருக்கும். இந்த நிலம் என்ற பூதம் உடலில் அளவிற்கு அதிகமாக இருந்தால் பேராசை ஏற்படும்; மன சஞ்சலம் ஏற்படும்.

பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது. உள்ளமும் அமைதியாக இருக்கின்றது.

ஜீரண சக்தியை அதிகரிக்க

தெரிந்துகொள்ளுங்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க

தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

 தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

சரக் கொன்றை கசாயம்

வாத நோய்களிலேயே மிகவும் மோசமான நோய் முடக்கு வாதம் ஆகும்.
வெறும் வலிகள் மட்டும் அல்ல, மூட்டுகளின் அமைப்பு, மற்றும் இயக்கம், ஆகியவற்றைப் பாதித்து, முடக்கும் நோய் ஆகும்.
காலை எழுந்திருக்கும்போது கைகால்களை மடக்க முடியாமல், நகர முடியாமல், மணிக்கணக்கில் முடக்கிப் போட்டு சிரமம் கொடுக்கக் கூடிய, மருத்துவர்களுக்கே மிக சவாலாக இருக்கக் கூடிய நோய் இது.

மஞ்சள்

நமது தமிழ்ச் சமுதாயத்தில் மகளிர் ஏதோ பூசிக் குளிக்கும் மஞ்சள் என்று பழக்கத்தினை மட்டும்தான் பார்த்திருப்போம்   இந்த மஞ்சளில் இருக்கின்ற மருத்துவகுணங்கள் அபாரமானது. ஆம் மஞ்சள் ஒரு ஆன்டி-பாக்டீரியல் ஏஜென்ட் அதாவது கிருமிநாசினி, அடுத்ததாக மஞ்சளில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் அதாவது

குதிகால் வலி குணமாக

குதிகால் வலி குணமாக கொஞ்சம் தென்னமரக்குடி எண்ணெய் அதனுள் சிறிது கற்பூரம் இரண்டு பூண்டு பற்கள் ஆகியவற்றை ஒரு கரண்டியில் எடுத்து சிறிது சூடு பண்ணி இதமான சூடு வந்தவுடன் அந்த எண்ணையை குதிகாலில் தேய்த்து விட வலி நீங்கும்

தெரிந்துகொள்ளுங்கள்

அனைத்து வகை காய்ச்சலும் குணமாக பற்பாடகம், நிலவேம்பு , சுக்கு , மிளகு, சீரகம், அதிமதுரம் இவற்றில் சுக்கு ஒரு சிறு துண்டு மிளகு 5 சீரகம் அரை டீஸ்பூன்மீதமுள்ள பற்பாடகம் அதிமதுரம் நிலவேம்பு இவை தனித்தனியே 5 கிராமளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சிமூன்றில் ஒரு பங்கு எடுத்துகாலை மாலை இருவேளை 30

பாவட்டை செடி

1.பாவட்டை செடியின் வேரை எடுத்து வந்து பொடியாக நறுக்கி நன்கு சுத்தி செய்து பிட்டு போல அவியல் செய்து அதை அரைத்து ஆசனவாயில் கட்டி வந்தால் மூலம் சுருங்கும்.

2.துத்தி இலை ஒரு கைப்பிடி குப்பைமேனி ஒரு கைப்பிடி நாயுருவி தழை கொஞ்சம் சுத்தி செய்து அதனுடன் சிறிய வெங்காயம் 3 சேர்த்து நன்கு விழுதாக அரைத்து ஒரு உருண்டை போல் உருட்டி எருமை தயிர் அப்படி இல்லையெனில் பசு தயிரில் உருட்டி காலையில் ஒரு ஐந்து நாட்கள் வெறும் வயிற்றில் குடித்துவர மூலம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
3.துத்தி இலை கொஞ்சம் எடுத்து சுத்தி செய்து விளக்கெண்ணையில் வதக்கி இரவில் ஆசனவாயில் கட்டி வர அரிப்பு நமச்சல் பிலிடிங் பைல்ஸ் போன்றவை குணமாகும் .

நெல்லிக்கனி

நெல்லிக்கனி ஒரு தெய்வீக கனி, ஆம், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தை விட ஏராளமான மடங்கு விட்டமின் C சத்துக்களை தன்னுள்ளே அடக்கியது  ,அதுமட்டுமல்ல ஆப்பிளைக் காட்டிலும் புரதச்சத்துக்கள் மிகுதியாக நிறைந்தது. மற்றுமொரு சிறப்பு உடம்பில் இரும்புச் சத்துக்களை அதிகம் கிரகிப்பதை முக்கிய பங்காற்றுகிறது.ஆகவே இந்த ஏழைகளின் ஆப்பிளை தேனில் ஊறவைத்து வாரம்  2முறை 3 நெல்லிக்கனிகளை சாப்பிட்டுக்கொண்டே வர உடம்புக்கு நன்மை செய்யும். பயன்பெறுவோம் பலன் அடைவோம்.

பொன்னாங்கண்ணி கசாயம்

நிறைய வகை காய்ச்சல்களால் நாம் பாதிக்கப் பாடுகிறோம்.
சாதாரண காய்ச்சல், மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கின் குனியா காய்ச்சல், என பல வகை காய்ச்சல்கள் பாதிக்கின்றன.
சில காய்ச்சல் சாதாரணமாகவும், சில காய்ச்சல் உயிரையே பறிக்கக் கூடிய அளவிலும் இருக்கிறது.
தொற்றுகளால் வரும் காய்ச்சல்களைக் குணப் படுத்த,
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு
அல்லது

புங்கம் பட்டைக் கசாயம்

நரம்பு நோய்கள் - குறிப்பாக பக்கவாதம் ஏற்படும்போது, மூளையில் இருந்து வர வேண்டிய தகவல்கள் மூளையின் செயல் இழப்பினால் அல்லது மூளையின் சில பகுதிகளில் செயல் இழப்பு ஏற்படும்போது,  வெகுவாகப் பாதிக்கப் படுகின்றது .
அதன் காரணமாக உடலுடைய இயக்கங்கள் குறைந்து போய் விடுகின்றன
முதுகுத் தண்டு  ஒடிந்து விட்டால் அதற்குக் கீழே  இருக்கும் நரம்புகள் முற்றிலுமாக செயல் இழந்து போகும் நிலை ஏற்படுகிறது .
கடுமையான சர்க்கரை நோய் காரணமாக நகர்த்த முடியாத அளவுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகிறது.
இவை அனைத்தையும் குறைக்கக் கூடிய நீக்கக் கூடிய மருந்து இது.
மிக வேகமாக நரம்புகளையும் மூளை செயல்பாடுகளையும் மாற்றக் கூடியது இந்த மருந்து

மாதவிலக்கு பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். பெண்களின் மாதவிலக்கு பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளை போக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

முறையற்ற மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஆடு தீண்டாப் பாலை கசாயம்

ஆண்களின் ஆண்மைத்தன்மையை வளர்த்து இனப் பெருக்க மண்டல கோளாறுகளைள் படிப்படியாக நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தி குணம் கிடைக்க உதவும் மருந்து இது 

மருந்து 
பூமி சர்க்கரை கிழங்கு சூரணம் ............... இரண்டு கிராம்
சுத்தி செய்த பூனைக்காலி விதை சூரணம்...............  இரண்டு கிராம்
ஆடு தீண்டாப் பாலை சூரணம்..............  இரண்டு கிராம்
ஆகிய மூன்று பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
 நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,

பசலைக்கீரை

ஆண்களுக்கான உயிரணு உற்பத்தி மற்றும் அது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தரை பசலைக்கீரை நன்கு பயனளிக்கும்.குழந்தைப்பேறு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் தரை பசலை கீரையை பாசிப் பருப்பு போட்டு கடைந்து வெள்ளை சாதத்தில் போட்டு பசு நெய் விட்டு சாப்பிட்டுக் கொண்டு வர வாரத்தில் இரண்டு நாட்கள் உயிரணு

சிறுநீரகக் கசாயம்

மருந்து
நீர் முள்ளி சூரணம் ..........  இரண்டு கிராம்
நெருஞ்சில் வேர் அல்லது முள் சூரணம்  ..........  இரண்டு கிராம்
சோம்பு தூள் ..........  இரண்டு கிராம்
தனியா தூள் ..........  இரண்டு கிராம்
ஆகிய நான்கு  பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
 நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
உணவுக்கு சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக்
குடித்து வர வேண்டும்.

கொரோனா வைரஸ்..!

கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து விடும்.  அதனால் சாதாரண முகமூடியையே பயன்படுத்தலாம்.

 வைரஸ் காற்றில் கலப்பதில்லை. அதனால் கொரோனா காற்றின் மூலம் பரவுவது இல்லை.

ஆனால் தரையில் படியும். அதனால் நம் வீட்டு அலுவலக தரைகளை அவ்வப்போது சுத்தமாக துடைப்பது நலம்.

கொரோனா வைரஸ் ஒரு உலோக மேற்பரப்பில் விழும்போது, ​​12 மணி நேரம் வாழும். எனவே சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுங்கள்.

ஆஸ்துமா - Wheezing

ஆஸ்துமா அறிவோம்...

ஆஸ்துமா என்பது சுவாசக் குழாயில் ஏற்படும் பிரச்சினை ஆகும்.
இதில் மூச்சு உள்ளிழுப்பதிலும் வெளி விடுவதிலும் சிரமம் ஏற்படுவதோடு Wheezing எனப்படும் சிறப்பு ஒலியும் இணைந்து காணப்படும்.

ஆஸ்துமா பாதிப்பு (Attack)என்றால் என்ன..?

நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கும் மூச்சுக்குழாயில் உட்பக்க சுவரானது குளிர் காற்று புகை அல்லது தூசு இவற்றின் தாக்குதல் ஏற்படும் வேளையில் ஒவ்வாமை(Allergy) ஏற்பட்டு திடீரென வீக்கம் அடைந்து இறுக்கமாகிவிடும் நிலையே ஆஸ்துமா பாதிப்பு (Asthma Attack) என்று அழைக்கப்படும்.

வெந்தயம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் வெந்தியம் பயனாகிறது .இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெந்தியம் நம் உடலை சுத்தம் செய்யும் ஆற்றல் வாய்ந்தது மலச்சிக்கலையும் போக்கவல்லது. ஆனால் இதை முளைப்பு கட்டியே உன்ன வேண்டும்.50 மில்லி நீரில் ஒரு சின்ன டீஸ் Spoon வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும் மறுநாள்  பிரஷ் பண்ணி விட்டு அந்த வெந்தயத்தை நீருடன்  சாப்பிட்டு விடவேண்டும் .அவ்வாறு சாப்பிட்டுக் கொண்டு

வெள்ளைப்படுதல் குணமாக

1.மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் தூள் இவை மூன்றையும் சம அளவு அதாவது 100 100 கிராம் எடுத்து நன்கு பொடியாக வைத்துக்கொண்டு காலை மாலை உணவுக்கு பின்பு அரை டீஸ்பூன் அளவுக்கு நீரிலிட்டு எடுத்து அருந்தி வர வெள்ளைப்படுதல் ஒரு வாரத்தில் குணமாகும்.

2.வாழைப்பூ வயிற்றுப்புண்களை குணமாக்க வல்லது வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது வெள்ளைப்படுதல் குணமாக மருந்தாகப் பயன்படும்.

திருமணமான ஆண்களுக்கு சில உணவு பழக்கவழக்கங்கள்

திருமணமான ஆண்களுக்கு சில உணவு பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.உதாரணமாக நட்ஸ் வகைகள் ஆவரேஜ் ஆக உணவில் தினம் சேர்க்கப்படவேண்டும். விட்டமின் ஏ சத்துக்கள் உடலில் ரெகுலராக சேர்க்கப்பட வேண்டும். லைகோபின் என்று சொல்லக்கூடிய உயிர்ச்சத்துக்கள் சிகப்பு நிற தோல் கொண்ட பழவகைகளில் ஏராளமாக இருக்கிறது இவை

தொற்று நோயை தடுக்கும் வழிமுறைகள்

மக்கள் உரங்குறைந்திருக்கும் காலமாகிய ஆதாநகாலங்களில் (தை முதல் ஆடி) தொற்றுநோய்கள்பெரும்பாலும் தோன்றும்.

அன்றியும் ஊர்களில் மழை குறைந்து, உணவின்றி பஞ்சம் மேலிடுங் காலத்தில் மக்கள் வன்மை குறையுமாகையால், அக்காலத்தில் இம்மாதிரியான நோய்கள் தோன்றும்.

குப்பை மேனியின் மருத்துவ பயன்கள்

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.