Wednesday, 18 March 2020

நெல்லிக்காய் - Gooseberry

நெல்லிக்காய்த் துண்டை குடிநீரில் சிறிது நறுக்கிப் போட்டு அருந்தினாலே போதும். அதுவே அருமருந்தாய் நல்ல பலனைத் தரும். மேலும், நெல்லிக்காயுடன் அரை கைப்பிடி கறிவேப்பிலை, அரை கைப்பிடி கொத்தமல்லி, புதினா, இஞ்சி எல்லாம் சேர்த்து அரைத்து, தேன் கலந்தோ அல்லது தண்ணீர் சேர்த்தோ குடிக்கலாம். அல்லது உப்பும் கொஞ்சம் மிளகுத்தூளும் சேர்த்துப் பருகலாம்.
நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நெல்லிக்காய்தான் சளிக்கு சிறந்த சிகிச்சை. வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலுக்கு நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். மருத்துவர்கள், ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடச் சொல்கின்றனர். ஆனால், ஒரு நெல்லிக்காய், ஆப்பிளுக்கு சமமான சத்துகளை உடையது. நரை முடி ஏற்படாது தடுக்கும். மூளைத்திறனை உயர்த்தும். தொற்றுகள் வராமல் காக்கும்.

No comments:

Post a Comment