Monday, 14 May 2018

காது மந்தம்

மன அதிர்வு  மன அழுத்தம் சில ஓவ்வாமை பிரச்சினைகள்  சில வேதியல் மாத்திரைகள் சாப்பிடுவதால்
காதில் ஓயாத இரைச்சல் காதில் எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது ஆகிய பிரச்சினைகள்  ஏற்படலாம்
மருந்து செய்யும் முறை
தூதுவேளை இலைகளை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் இடித்து சாறு எடுக்க வேண்டும்
ஒரு மில்லி நல்லெண்ணெய்க்கு ஒரு சொட்டு தூதுவேளை இலை சாறு தேவைப்படும்



செக்கு நல்லெண்ணெய்   ........ முப்பது மில்லி
தூதுவேளை இலை சாறு   ...........  முப்பது சொட்டு

முப்பது மில்லி செக்கு நல்லெண்ணையை சூடு படுத்தி அதில் முப்பது சொட்டுகள்  தூதுவேளை இலை சாறு   ஊற்றி சிறுதீயில்  காய்ச்சி பொட பொட வெனப் பொரிந்து சல சலப்பு சத்தம் அடங்கி விட்டபின்   தைலமாக்கி இறக்கி வடிகட்டி பாட்டிலில் சேமிக்கவும்
முறுக விட்டு விடக் கூடாது


மருந்து பயன்படுத்தும் முறை
நோய் உள்ள காதில் இரவு படுக்கப் போகும் முன்னர்
மூன்று சொட்டுகள் தூதுவேளைத் தைலத்தை விட்டு
ஒரு பஞ்சு வைத்துக் கொண்டு
 இரவில் தூங்கி விடலாம்
காலையில் எழுந்து பஞ்சை எடுத்து விட்டு காது சுத்தப் படுத்தும் பட்ஸ் வைத்து துடைத்து விட வேண்டும்
இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வர
பத்தில் இருந்து முப்பது நாட்களுக்குள் காது இரைச்சல் ஓடி விடும்
காது மந்தமாக இருப்பவர்களுக்கு காது கேட்க ஆரம்பித்து விடும்

குணமாகும் வரை தொடர்ந்து இந்தத் தைலத்தைப் போட்டு வர வேண்டும் 

No comments:

Post a Comment