Thursday, 31 May 2018

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க

கல்யாண முருங்கை இளம் இலைகளை பருப்பு சேர்த்து பசு நெய் விட்டு சமைத்து உண்டுவர  தாய்ப்பால் சுரக்கும்.

வீக்கம் குறைய

பப்பாளி இலையின் மேல் சிற்றாமணக்கெண்ணையை தடவி தணலில் துவள வதக்கி வீக்கம் மீது காலை மாலை இரு வேளை மூன்று நாட்கள் கட்டி வர வீக்கம் வற்றும். இரத்தக்கட்டும் கறையும்.

தேள்கடி விஷம் இறங்க

16 மிளகை எடுத்து முற்றிய தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும்.

காசநோய் குணமாக

1. செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

2. காசம் இறைப்பு நீங்க கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

பல்பொடி

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ பல்பொடி.
1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு
இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.

இரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் குறைய சீரகத்தை கரும்புச் சாற்றில் கலந்து வெயிலில் மூன்று தினங்கள் காயவைக்கவும். பின்னர் காய்ந்த சீரகத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து மூன்று தினங்கள் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். காலை, இரவு சாப்பிட்டு வர ரத்த அழுத்த நோய் குறையும்.இந்த முறையை சக்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்கவும்

கோதுமையின் மருத்துவப் பயன்கள்

⬤ முதுகுவலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொண்டால் குணமாகும்.


⬤ புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி வைத்து குடித்தால் உடனே குணமாகும்


⬤ கோதுமை மாவை அக்கிப் புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணைய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.



சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலிற்கு தேவையாக ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும்.

100கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் இதில் உள்ளது.

Monday, 28 May 2018

பெண்களின் மார்பக கட்டிகறைய எளிய மருத்துவம்

நவச்சாரம் 5 கிராம்
500 மில்லி சுத்தமான பன்னீரில் கரைத்து அதில் .வெள்ளை துணிகளை நனைத்து கட்டிட பின் மீது மாறி மாறி போட்டு வர மார்பில் தோன் றிய கட்டி மறையும் கரையும்

பல நோய்களுக்கான, ஒரு மருந்து !!!

*  வெந்தயம்.    -  250gm
*  ஓமம்               -  100gm
*  கருஞ்சீரகம்  -  50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.


பல் நோய்கள்(வலி) தீர

மா இலை – 50 கிராம்

கொய்யா இலை – 50 கிராம்

ஆலந்துளிர் – 50 கிராம்

அரசந்துளிர் – 50 கிராம்

வேப்பந்துளிர் - 50 கிராம்

நாயுருவி வேர் - 50 கிராம்

முடக்கத்தான் - 50 கிராம்

மஞ்சள் - 50 கிராம்

இந்துப்பு - 20 கிராம்


இதய டானிக்

இதய அடைப்பு இதய வால்வு அடைப்பு இதய வால்வு வீக்கம் பம்பிங் கெபாசிடி குறைவு
இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும் மருந்து

கடுக்காய் ................ பத்து கிராம்
நெல்லி வற்றல் ................ பத்து கிராம்

தான்றிக்காய் ................ பத்து கிராம்

மருதம்பட்டை ................ பத்து கிராம்

அமுக்குரா கிழங்கு ................ பத்து கிராம்

நெருஞ்சில் ................ பத்து கிராம்

சதாவரி ................ பத்து கிராம்

சீரகம் ................ பத்து கிராம்

ஓமம் ................ பத்து கிராம்


புற்று நோயாளிகளின் பேதி குணமாக

சோம்பு ...............  பத்து கிராம்
தனியா...............  பத்து கிராம்
கருஞ்சீரகம் ...............  பத்து கிராம்
பட்டை ...............  பத்து கிராம்
அதிமதுரம் ...............  பத்து கிராம்
சதகுப்பை ...............  பத்து கிராம்
கற்கண்டு ......அறுபது கிராம்
அனைத்துப் பொருட்களையும் சேர்த்து அரைத்து சூரணமாக்கி

பாத வெடிப்பு குணமாக

கண்டங்கத்தரி இலையை சுத்தம் செய்து ஒரு மண் சட்டியிலிட்டு அரை டம்ளர் தேங்காய் எண்ணைய் விட்டு நன்கு வதக்கி இலை கருகி வரும்போது எடுத்து ஆறவைத்து தெளிந்த எண்ணையை ஒரு பாட்டலில் சேமித்து தினம்தோறும் இரவு தூங்கபோகும் முன் பாதவெடிப்பினில் தடவி வர வெடிப்பு மறையும்.

ஓரிதழ் தாமரை.!

"ஏம்மாம் ஓரிதழ்த் தாமரை சமூலம்
இணைத்து மேசூரணித்து நெய்யிற்கொள்ள
சேமமா உடம்பில் நின்ற வேகமெல்லாம்
சிதைந்துமே போய்விடும் சிறுநீர்தானும்
காமமாய் குளிர்ந்துவிடும் கண் புகைச்சல்
காமாலைவரட் சியொடு கடிய பித்தம்
வாமமாயப் போய்விடு மண் டலந்தான் கொள்ளு
மகத்தான ரோகம் எல்லாம் மாறிப்போமே"

- போகர் கற்பம்.

உடல் அரிப்பு நீங்க

ஆவாரம் பூவுடன் , பச்சைப்பயறு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து உசிலைபொடி தேய்த்து வெது வெதுப்பான நீரில் ஒரு வாரம்  குளித்து வர அரிப்பு நீங்கும்

விஷ்ணு கிரந்தி

இதன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தம் செய்து மண்சட்டியிலிட்டு நீர் விட்டூ நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை கொடுத்து வந்தால் வயீற்று போக்கு நிற்கும்.

தேள் மற்றும் நட்டுவாக்கிளி விஷம் இறங்க

தும்பைசெடியை எடுத்துவந்து சுத்தி செய்து அம்மிக்கல்லில் வைத்து மைய அரைத்து எலுமிச்சம் பழம் அளவுக்கு உள்ளுக்கு சாப்பிட்டு விட்டு சக்கையை கடிவாயில் தேய்க்க விஷம் இறங்கி கடூப்பு நீங்கும்.

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

சிறுநீரகம் : நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.
வயிறு : குளிரூட்டப்பட்ட உணவுகள்.
நுரையீரல் : புகைப்பிடித்தல்.
கல்லீரல் : கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.
இதயம் : உப்பு நிறைந்த உணவு வகைகள்.
கணையம் : அதிகப்படியான நொறுக்கு தீனி

குடல் : கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.
கண்கள் : தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.
பித்தப்பை : காலை உணவை தவிர்ப்பது.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க

தரைப்பபசலை கீரையை ஆய்ந்து சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து பசுவின் பாலில் ஐந்து நாட்கள் காலையில் மட்டும் அருந்திவர பால் நன்கு சுரக்கும்.மேலும் பிரசவித்த தாய்மார்கள் இரும்புசத்து நிறைந்த உணவுகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.உதாரணமாக பேரிச்சை, அத்திப்பழம், முருங்கை கீரை, பூண்டு, அசைவம் சாப்பிடுபவர்கள் ஆட்டு சுவரொட்டி, சுறாமீன்  போன்ற உணவுகள் அவசியம்  சேர்க்க வேண்டும்.  

Wednesday, 23 May 2018

வெஜிடபிள் கைமா இட்லி

தேவையான பொருட்கள்:
இட்லி – 8
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
வேக வைத்த பச்சைப் பட்டாணி – 1/4 கப்
குடை மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.


Thursday, 17 May 2018

செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:
சின்ன கத்திரிக்காய் - 8
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பொடி மசாலாவிற்கு...
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 7
மிளகு - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
தேங்காய் - 1/4 கப்
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

கரூர் கரம்

தேவையானவை:
கரம் செய்ய:
பொரி - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பீட்ரூட்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
தட்டை - 4
வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
சட்னி செய்ய:
தேங்காய்த்துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 7 (பெரியது)

பலாப்பழ சக்கவரட்டி

தேவையான பொருட்கள்:
பலாச்சுளைகள் – -20
வெல்லம் – -200 கிராம்
முந்திரிப்பருப்பு – -10
ஏலக்காய்த்தூள் – -சிறிதளவு
நெய் – -100 மி.லி


வெஜ் சீக் கபாப்

தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய பீட்ரூட் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலைப் பொடி - கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

கறி சாப்ஸ்

தேவையான பொருட்கள் :
சாப்ஸ் கறி – 1/4 கிலோ (எலும்புடன் சேர்த்து பெரிய துண்டாக வாங்கவும்)
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
மல்லி – 1 மேஜைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 8 (வெட்டியது)
தேங்காய் – 1 முடி
இஞ்சி – சிறியது
பூண்டு – 4 பல்
முந்திரிப்பருப்பு – 15
உப்பு, மஞ்சள்

கோகனட் கேரட் ஸ்வீட்

தேவையானவை:
துருவிய கேரட் - ஒரு கப், ஓடு நீக்கி வெள்ளையாக துருவிய தேங்காய் - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு... கேரட், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கிய பின் சர்க்கரை சேர்க்க... கலவை இளகும். இதை கை விடாது நன்கு கிளறி, கையில் ஒட்டாத பதத்துக்கு கலவை இறுகி வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி வில்லைகள் போடவும்.

தேங்காய் வெல்ல உருண்டை

தேவையானவை: 
தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லத்தூள் - கால் கப், ஏலக்காய்த்துள் - 2 சிட்டிகை, நெய் – சிறிதளவு, அரிசி மாவு - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கரைய விடவும். பிறகு வடிகட்டி மீண்டும் கரைசலை அடுப்பிலேற்றி உருட்டுப் பதம் வரும் வரை காய்ச்சவும். அதனுடன்

மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரைடீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

தட்டை

தேவையான பொருட்கள்:
அரிசிமாவு — (லேசாக சூடு செய்தது) 3 கப்
உளுந்துமாவு — 1/4 கப்
வெண்ணெய் — 25 கிராம்
கடலைபருப்பு (ஊற வைத்தது) — – 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை — 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – — 1 1 /2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் — – 1/2 தேக்கரண்டி
உப்பு — தேவையான அளவு
எண்ணெய் — பொரிப்பதற்கு


வெந்தயக்கீரை பருப்பு

வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. அதிலும் தற்போதுள்ள காய்கறிகளின் விலையுடன் ஒப்பிடுகையில், கீரைகளின் விலை குறைவு என்பதாலும், காய்கறிகளை விட அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை அடக்கியுள்ளதாலும், இதனை வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதுவும் வெந்தயக்கீரையில் எண்ணிடலங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை அவ்வப்போது உணவில் சேர்ப்பது நல்லது. இப்போது வெந்தயக்கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து எப்படி கடைந்து சாப்பிடுவதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த கீரையை குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து வந்தால், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

ராகி லட்டு

தேவையான பொருட்கள்:
ராகி (கேழ்வரகு) மாவு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – கால் கப்
சூடான பால் – 2 அல்லது 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
முந்திரி – 5


Wednesday, 16 May 2018

சம்பங்கி

சம்பங்கி இலையை எடுத்து வேப்பஎண்ணையில் சட்டியிலிட்டு வதக்கி  வீக்கம் உள்ள இடத்தில் கட்டிவர வீக்கம் கரையும்.

சம்பங்கி பூவை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தம் செய்து 2 டம்ளர் நீரிலிட்டூ பாதியாக வற்றியதும் வடிகட்டி அதனுடன் சிறிது
 சக்கரை சேர்த்து இரவு தூங்கும் முன்பு அருந்தி வர மலசிக்கல் நீங்கி, மலம் வெளியேறும்.

Monday, 14 May 2018

சூரியகாந்தி சாகுபடி!

 தமிழ்நாட்டில் மற்ற தாவர எண்ணெய்களை விட சூரியகாந்தி எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொருளியல் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்தின் தகவல்படி, 2014-15-ம் ஆண்டு இந்தியாவில் சூரியகாந்தி 0.55 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சூரியகாந்தி அதிகம் விளைவிக்கப்படுகின்றது. இந்தியாவின் மொத்த சூரியகாந்தி விதை உற்பத்தியில் இம்மாநிலங்கள் 82 சதவிதம் பங்களிக்கின்றது. சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன், ரஷ்யா, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது.

சேனைக் கிழங்கு சாகுபடி!

சேனைக் கிழங்கு சாகுபடி செய்ய சித்திரை, ஆடிப் பட்டங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் நல்ல  விளைச்சல் கிடைக்கும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் ஏற்றவை. சேனைக்கிழங்கின் வயது 8 முதல் 10 மாதங்கள் .
தேர்வு செய்த நிலத்தில், சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காயவிட வேண்டும். ஆனி மாதம் 2டன் தொழுவுரத்தை நிலத்தில் கொட்டி பரப்பி விட வேண்டும். பிறகு உழவு செய்து 15 நாட்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். மறுநாள் 5 அடி அகலம் 8 அடி நீளத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்குள்ளும் ஓர் அடி இடைவெளியில் அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஒரு பாத்தியில் 32 குழிகள் எடுக்கலாம். அரை ஏக்கர் பரப்பில் ஊன்ற 600 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும். ஒரு முழு விதைக்கிழங்கை நான்கு, ஆறு, எட்டு என எத்தனை துண்டுகளாக வேண்டுமானாலும் வெட்டி நடவு செய்யலாம். ஆனால், வெட்டும்போது கிழங்கின் நடுப்பகுதியில் உள்ள முளைப்புப் பகுதி, அனைத்துத் துண்டுகளிலும் இருக்குமாரு பார்த்து வெட்ட வேண்டும். முளைப்புப்பகுதி இல்லாவிட்டால் முளைக்காது.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என்பது பழமொழி. இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செப்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி...விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்குக்கு சிறப்பான தீர்வு

✦ பெண்களுக்கு மாதவிடாய்க் கால ங்களில் ஏற்படும் உதிரப்போக்குக்கு சித்த மருத்துவ த்தில் சிறப்பான தீர்வு உண்டு அதைப்பற்றி இங்கு காண்போம்.


✦ பெண்களுக்கு மாதவிடாய்க் கால ங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந் தால் அதை அதி உதிரப்போக்கு எனகிறோம்.

அருகம்புல்

அருகம்புல் மருந்தாக சாப்பிடும் முறை
அருகம்புல் ...............  ஒருபிடி
மிளகு ..............  ஆறு எண்ணம்
சீரகம் ..........  அரைத்தேக்கரண்டி

சேர்த்து மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாறு இரு நூறு மில்லி தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வரலாம் 
வேறு முறை
அருகம்புல் ...............  ஒருபிடி
மிளகு ..............  ஆறு எண்ணம்
சீரகம் ..........  அரைத்தேக்கரண்டி


செவ்வாழைப்பழம்

செவ்வாழை பழத்தில்  லைக்கோபின் ' வகை உயிர்சத்துக்கள் நிறைந்தவை.
புது மண தம்பதிகள் உண்ண தகுந்தவை.

தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழைபழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.

மண் பாண்ட சமையல்

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. பாத்திரம் என்ற வரிசையில்கூட அது வராதது வருத்தத்தை அளிக்கிறது.

காது மந்தம்

மன அதிர்வு  மன அழுத்தம் சில ஓவ்வாமை பிரச்சினைகள்  சில வேதியல் மாத்திரைகள் சாப்பிடுவதால்
காதில் ஓயாத இரைச்சல் காதில் எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது ஆகிய பிரச்சினைகள்  ஏற்படலாம்
மருந்து செய்யும் முறை
தூதுவேளை இலைகளை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் இடித்து சாறு எடுக்க வேண்டும்
ஒரு மில்லி நல்லெண்ணெய்க்கு ஒரு சொட்டு தூதுவேளை இலை சாறு தேவைப்படும்

Tuesday, 8 May 2018

பாரம்பரிய உணவு

கம்பு, கேள்வரகு, சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும், கம்மஞ்சோறு, கேப்பைக்களி போன்றவை தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்தன. இத்தகைய உணவுகளை உண்டதால், தமிழர்கள் பலம் மிக்கவர்களாக இருந்தனர்.
அரிசி உணவு, மக்களை தொற்றிக் கொண்ட பின், கம்மங்கூழ், கேப்பைக் கூழ் சாப்பிடுவதை கௌரவ குறைச்சலாக கருதத் தொடங்கினர். சமீப காலமாக, கிராமங்கள் வரை வெளிநாட்டு குளிர்பானங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?', `பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?'... பனை மரம் பற்றி இதுபோன்று ஏராளமான பழமொழிகள் உள்ளன. பனை மரம்... இலை முதல் விதை, பழம் என அதன் அனைத்து உறுப்புகளும் மனிதனுக்கு நலம் தரக்கூடியவை. அதனால்தான் தமிழக அரசின் மாநில மரம் என்ற பெருமையை பனைமரம் கொண்டுள்ளது. பனைமரத்தை பத்திரகாளியின் அம்சமாகக் கருதி வணங்கி வருகிறார்கள். சிலர் வேரியம்மன் என்ற பெண் தெய்வமாகவும் வணங்கி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல திருக்கோயில்களில் பனைமரம் தலவிருட்சமாகவும் உள்ளது. நுங்கு, பதநீர் போன்றவை தமிழரின் உணவுகள். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பனை மரத்தொழில் பரவலாகக் காணப்படுகிறது.
ஆண் - பெண் பனை:
பனையில் ஆண் பனையை அலகுப்பனை என்றும், பெண் பனையை பருவப்பனை என்றும் சொல்கிறார்கள். பெண் பனையிலிருந்துதான் நுங்கு கிடைக்கும். ஆனால், ஆண், பெண் இரண்டு பனைகளில் இருந்தும் பதநீர் எடுக்கலாம். யதார்த்தம் இப்படியிருக்க பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் அதன்பிறகு நுங்கு கிடைக்காது. அப்படி நுங்கு கிடைக்காவிட்டால் பனம் பழம் கிடைக்காது.

உடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்

உணவோடு நீரை பருகாதே !
கண்ணில் துசி கசக்காதே !
கழிக்கும் இரண்டையும் அடக்காதே !
கண்ட இடத்தில் உமிழாதே !
காதை குத்தி குடையாதே !
கொதிக்க கொதிக்க குடிக்காதே !
நகத்தை நீட்டி வளர்க்காதே !
நாக்கை நீட்டி குதிக்காதே !
பல்லில் குச்சிக் குத்தாதே !
பசிக்காவிட்டால் புசிக்காதே !

சீரான மாதவிடாய் சுழற்சி

பெண்ணின் கர்ப்பபையில் நன்கு வளர்ந்த கருமுட்டை ஆண்ணின் விந்துகாக காத்திருக்கும்,விந்து வந்து தன்னை அடையாத பொழுது அந்த கரு முட்டை உடைந்து ரத்த போக்காக வெளியேறும்,இதையே நாம் மாதவிடாய் என்கிறோம்.28
நாட்களுக்கு ஒரு முறை வருவதே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும்.சிலருக்கு 30 நாட்களுக்குள் வருவதும் இயல்பே.இரண்டு மாதங்கள் மற்றும் அதற்கு மேலே மாதவிடாய் வராமல் இருப்பது சீரற்ற சுழற்சியை குறிக்கும்.இதில் 3 முதல் 5 நாட்கள் இரத்த போக்கு இருப்பது இயல்பான சுழற்சி.மாதவிடாய் ஏற்படும் முதல் நாள் கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறும்.சராசரியாக மாதவிடாய் நாட்களில் வெளியேறும் இரத்தத்தில் 25% முதல் 40% வரையில் மட்டுமே இரத்தம் முதல் நாளில் வெளியேறும்.இரண்டாம் நாள் 80% இரத்தம் வெளியேறும்.பின்பு மூன்று மற்றும் அதன் பின் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும்.இரண்டாம் நாளில் இருந்து வெளியேறும் இரத்தம் ரத்த சிவப்பிலே இருக்கும்.இதுவே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும்.சிலருக்கு 2 நாட்கள் மட்டுமே மாதவிடாய் வருவதும் உண்டு,இது இயல்புக்கு மாறுபட்டாலும் சில மருத்துவர்கள் இதை நல்ல மாதவிடாய் சுழற்சி என ஏற்று கொள்கிறார்கள்.விந்துக்கு காத்திருக்கும் முட்டை விந்து வந்தடையாத பொழுது உடைந்து வெளியேறிவிட வேண்டும் ,இதுவே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்து.அப்படி வெளியேற கால தாமதம் ஆகும் பெண்ணிற்கு மாதவிடாய் கோளாறு இருப்பதாய் அறியலாம்.

ஏன் இந்த மாதவிடாய் கோளாறு வருகிறது?
~~~~~~~ 🌴🌷 ~~~~~~~
தூக்கமின்மையே இதற்கு முதல் காரணமாகும்.சராசரியாக 6 முதல் 8 மணிநேரம் ஒரு மனிதனுக்கு தூக்கம் தேவை படுகிறது என ஆய்வு கூறுகிறது.செல்போன்,இணையதளத்தின் ஆதிக்கத்திற்கு பின்பு பெரும்பாலான இளைங்கர்களுக்கு சரியான தூக்கம் இருப்பதில்லை.இதனால் இரவில் சுரக்கும் ஹார்மோன்கள் சரியாக சுரபதில்லை.இதுவே மாதவிடாய் கோளாறு ஏற்பட முதல் காரணம்.
மன அழுத்தம் எனும் பெரிய ராட்சசன் இன்றைய தலைமுறையினரை ஆட்டி படைக்கிறது என கூறும் அளவிற்கு இளைஞர்கள்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனது இன்றைய அளவில் மிகவும் குறைந்து வருகிறது.முதல் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் நிஜங்களையும்,ஏமாற்றங்களையும் தாங்கி கொள்ளும் மனது இருப்பதில்லை.இதுவே மன அழுத்தம் உருவாக காரணமாக இருக்கிறது.சிறு சிறு ஏமாற்றங்கள் கூட இவர்களுக்கு ஏமாற்றங்களை தந்து பெரிய அளவில் மன அழுத்தத்தில் கொண்டு போய்விடுகிறது.
மாறும் உணவு முறைகள்."உணவே மருந்து,மருந்தே உணவு"என்றைய நம் தமிழ் உணவுமுறை மாறி, இன்று மருந்து மட்டுமே உணவாகிவிட்டது.முன்பு நாம் உண்ணும் உணவிலேயே மருந்தும் கலந்து இருந்தது.பல நாட்டு மக்கள் இன்றும் நம் தமிழரின் உணவுமுறையை கண்டு வியந்து கொண்டு இருக்கின்றனர்.இதற்கு காரணம் நம் உணவிலே நாம் எடுத்து கொள்ளும் மருந்து பொருட்கள்.அன்றாடம் நாம் எடுத்து கொள்ளும் ரசம் கூட வெளிநாட்டவர்களுக்கு அதிசயமே,அதற்கு காரணம் ரசதினில் உள்ள மருந்து தன்மையே.இது போன்ற சிறு உணவில் கூட நம் முன்னோர்கள் வெகு கவனமாய் இருந்தார்கள்.இன்று துரித உணவின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது.ஊட்டசத்து ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழிகளை உண்ணும் குழந்தைகள் விரைவிலேயே வயதுக்கு வந்துவிடுகின்றனர்.இந்த ஹார்மோன் மாற்றங்கள் நாம் உண்ணும் உணவினால் இயல்பாகவே நடந்து விடுகின்றது.
அதிக உடல் எடையும் முக்கியமான காரணியாக திகழ்கிறது.இந்த அதிகமான உடல் எடை தைராய்டின் காரணமாக கூட இருக்கலாம்.இந்த நோயை குணப்படுத்த உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.உடற்பயிற்சியின் மூலமாகவும் இந்த குறையை சரி செய்யலாம்.
மாதவிடாய் கோளாறுகள் போக்க மகத்தான வைத்தியங்கள் :🌴🌷
அருமருந்து.மருத்துவம் நிறைந்த இலைகளில் வேப்பிலை முதன்மை வாய்ந்தது .வேப்பிலை சாறு தொடர்ந்து அருந்துவதன் மூலம் வயிற்று கசடு நீங்கி சீரான மாதவிடாய் வர செய்யும்.
மாதவிடாய் கோளாறின் முக்கிய காரணம் இரத்தமின்மை.பீட்ரூட் உடம்பில் ரத்தம் ஊற செய்யும்.இதன் சாற்றை தினம் அருந்துவதன் மூலம் உடலில் ரத்தம் அதிகரிக்கும்.
பப்பாளியை சிறு துண்டுகளாகவோ அல்லது சாறு எடுத்தோ அருந்துவது மாதவிடாய்க்கு நல்ல மருந்து.பப்பாளி வாங்கும் பொழுது நாட்டு பப்பாளியா என்பதை நன்கு கவனித்து வாங்கவும்.அதிலும் விதை நிறைந்த நாட்டு பப்பாளியாக இருப்பது சால சிறந்தது.
கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை 7 முறை நீர் விட்டு கழுவி தண்ணீர் கலந்தோ அல்லது மோர் கலந்தோ அருந்துவதன் மூலம் மாதவிடாய் கோளாறை தவிர்க்கலாம்.
பீட்ரூட் போல கேரட்டும் உடம்பில் ரத்தம் அதிகரிக்க உதவும்.சிலருக்கு பீட்ரூட் சுவை பிடிப்பதில்லை அவர்கள் தினம் 5 கேரட்கள் உண்ணலாம்.அல்லது அவற்றை சாறாக எடுத்து அருந்துவதன் மூலம் ரத்தம் அதிகரிக்க செய்யும்.இது மாதவிடாய் வருவதற்கும்,வந்த பின்னர் ரத்தமில்லாமல் உடம்பு சோர்வடைவதை தவிர்க்கும.
உடல் சூட்டை குறைக்க அஞ்சரை பெட்டியில் இருக்கும் அதிசயமே வெந்தயம்.இதை தினம் காலை தண்ணீர் உடனோ அல்லது மோர் உடன் வெறும் வயிற்றில் தினம் எடுத்து கொள்வதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சூடு மற்றும் வயிற்று வலியை தவிர்க்கலாம்.
பேரிட்சை பழம் தினம் காலை 2 அல்லது 3 சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.இது ரத்தம் ஊறவும் மாதவிடாய் காலங்களில் தெம்பு கொடுக்கவும் உதவும்

அம்மை நோயிலிருந்து பாதுகாக்க

சின்னம்மை மிகவும் அதிகமாகத் தொற்றும் பண்புடைய நோயாகும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாக பரவலாம் அல்லது தொற்றுடையவர் இருமுவதாலோ தும்முவதாலோ காற்றின் மூலம் பரவலாம்.
சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் நோய் பரவலாம். சூரிய கதிரின் நேரடி தாக்குதலால் மயக்கம், தலை சுற்றல், தோல் வியாதி, வேர்க்குரு, கட்டி போன்றவைகள் ஏற்படக்கூடும்.
அதனால், பகல் 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே வெளியே செல்ல
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வெள்ளை நிறக்குடையை பிடித்துக் கொண்டோ அல்லது தொப்பி அணிந்தோ செல்ல வேண்டும்.
அம்மை நோய் தாக்கியவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அதோடு மருந்துகள் எடுத்துக் கொண்டால் எளிதில் குணம் பெறலாம். நோய் துவங்கிய உடன் நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், கஞ்சி சாப்பிடலாம். பழச்சாறு கள், பால் குடிப்பதும் நல்லது.
அம்மை நோய் தாக்கத்தின் போது ஏற்படும் காய்ச்சல் குறைந்த பின்னர் மசித்த உணவுகளாக சாப்பிட வேண்டும். சமையலில் எண்ணெய் சேர்க்கக் கூடாது. குறைந்தளவு உப்புதான் எடுக்க வேண்டும். மாதுளை, கருப்பு திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறுகள் அருந்தலாம்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டும். இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க பருத்தி உடைகளை உடுத்த வேண்டும். குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்ல கூடாது.
பெண்கள் வெயிலில் போய்விட்டு வந்தவுடன், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க கூடாது. கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கிருமிகள் இருக்கும். அதனால், குளித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது.
சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் காலரா, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் எளிதாக வரக்கூடும். அதனால், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும்.

நோய்கள் உருவாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு



13 - அனைத்து ரீபையின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

பெண்களின் கூந்தல் நீண்டு வளர

முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.  இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்
இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்,



இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே  கால் குவளையாக வரும் வரை  காய்ச்சி, காலையிலும்,மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்

குடலிறக்கம்(ஹெர்னியா-HERNIA)பற்றிய ஒரு பார்வை


⛷குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது.

💦மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.



💦மேலும் குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

💦இத்தகைய ஹெர்னியா இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

🕺🏻இப்போது அந்த குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

🍒அதிமதுரம்

🍒குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
 
🥜இஞ்சி

🥜இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
 
🌰சீமைச் சாமந்தி டீ

🌰வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.

🍯மோர்

🍯ஹெர்னியா இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று முமுறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.
 
🥃தண்ணீர்

🥃ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.
 
🍇பழங்கள்

🥝பழங்களில் அவகேடோ மற்றும் அன்னாசி போன்றவற்றை குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது சாப்பிட வேண்டும். இதனால் அவை புடைப்பு குறைப்பதோடு, வலியையும் சரிசெய்யும்.
 
🥒பச்சை காய்கறிகள்

🥒பச்சை காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைகோஸ் மற்றும் பாகற்காய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். இதனால் அவை தசைகளை வலிமையடையச் செய்து, குடலிறக்கத்தால் உள்ளுறுப்புகள் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.
 
பால்

ஹெர்னியா இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
 
🍹க்ரீன் டீ

🍹டீயிலேயே க்ரீன் டீ தான் ஹெர்னியாவை குணப்படுத்துவதில் சிறந்தது.ஆகவே தினமும் இரண்டு முறை க்ரீன் டீயை குடிக்க வேண்டும்.
 
🍪கோதுமை பொருட்கள்

🍪குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கோதுமை பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதனால் குடலியக்கம் சீராக செயல்பட்டு, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

முடி உதிர்வது முழுவதுமாக தடுக்க

1. முடி வளர : முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.

2. சொட்டைத் தலையில் முடி வளர : பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.

3. வழுக்கைத் தலையில் முடி வளர : கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.



4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.

5. முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.

முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.

தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக்கை மறைய இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்தச்சாறை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளர வாய்ப்பு உண்டு

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்தாலும் முடி நல்லா செழித்து வளரும். முடி கொட்டுவதும் நிற்கும்

 கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் சில:
கூந்தல் உதிர்வு

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

ரத்த சுத்திசெய்யும் புதினா பொடி

தேவையான பொருள்கள்

புதினா (உலர்ந்தது) – 150 கிராம்

மிளகு – 15 கிராம்

சீரகம் – 15 கிராம்

சோம்பு – 15 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

செய்முறை

அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து தூளாக்கிக் கொள்ளவும். இதை தினமும் காலை மாலை இருவேளையும் உணவுக்குப்பின் 5 கிராம் அளவு (1 ஸ்பூன்) சாப்பிட்டால் பசியின்மை, ருசியின்மை, ஜீரணக் கோளாறுகள், வயிற்றுவலி, வாயுக் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீரும்.

Monday, 7 May 2018

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.
சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.


மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

Sunday, 6 May 2018

பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கையின் கொடை வேம்பு

*🚨இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.*
*🚨விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.*
*🚨பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், ஊசித் தட்டான், பொறி வண்டு, தரை வண்டு, சிலந்திகள், குளவிகள், தேனீக்கள் போன்றவை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழ்நிலைகளையும் பாதிக்கிறது.*
*🚨பூச்சிக் கொல்லி மருந்துகளை திரும்பத் திரும்ப தெளிப்பதனால் பூச்சிகளானது பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கி கொள்கின்றன.*
*🚨இது மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவு தானியங்களிலும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் எஞ்சிய நஞ்சானது தேங்கி விடுகிறது. இதனால் மனிதர்களுக்கும், அவர்களைச் சார்ந்த விலங்கினங்களும், பறவைகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.*

சாமை சாகுபடி

மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம்.
சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால மாற்றங்களையும் தாங்கி வளரக்கூடியவை. சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க, விதை பெருக்கத் திட்டம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள்,எண்ணெய் பனை மற்றும் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த திட்டம், தீவிர சிறுதானிய சாகுபடி, சிறுதானிய விரைவு திட்ட அணுகுமுறை, மானாவாரி நிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், விதை கிராம திட்டம் போன்ற திட்டங்கள் உள்ளன. விவசாயிகள் இந்த திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு சிறு தானியங்களை பயிரிடலாம்.

சிவப்பரிசி

சிவப்பரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கி.மு.400-லேயே நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது. சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, ‘காட்டு அரிசி‘ என்றும் சொல்வார்கள். அதனால் தான் சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகம், பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் ‘மட்டை அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பது தான் உண்மை.

மருந்தாகும் வாழைப்பூ வடகம்!

தேவையானவை:
வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை.
கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.

ஆரோக்கியம் தரும் அருகம் புல்

‘ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ்ந்து வாழையடி வாழையென பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’என புதுமண தம்பதிகளை பெரியவர்கள் வாழ்த்துவர். அருகு வேர் பாதாளம் வரை பாய்ந்து உயிரை தன்னுள் அடக்கி சாகா மூலிகையாக திகழ்வதை அறியலாம். தம்பதிகள் இருவரும் ஒருவருள் ஒருவரென கணவர் உயிரை மனைவியும் மனைவி உயிரை கணவனும் உள் அடக்கி வாழ்வது என்பது இதன் பொருளாகும்.
மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்ணாமலேயே உடல் நோய் நீக்கும் ஓர் உயிர் மூலிகையாகும்.‘வினாயகனைத் தொழவும் அருகைத்தேடு, அழுவதை யொழிக்கவும் அருகைத்தேடு, காலை கல்லும், மாலை புல்லும் ஆளை வெல்லும்; காலை புல்லும்,மாலை கல்லும் ஆளைக்கொல்லும்’ என்பது பழமொழி. அதாவது, அதிகாலை எழுந்து மலை ஏறுவதும், மாலையில் புல்லில் படுப்பதும் உடற்பயிற்சி பெறுவதுடன் ஆரோக்கியம் தரும்.

Tuesday, 1 May 2018

மரிக்கொழுந்து பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும்.
இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.
மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.

மண்புழு உரம் தயாரிக்கும் எளிய முறைகள்

தேவையான பொருட்கள்
மண்புழு உரம் தயாரிக்க தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • மட்கக்கூடிய கழிவுகள்
  • மாட்டுச் சாணம்
  • கால்நடை கழிவுகள்
தயாரிக்கும் முறை
மட்கக்கூடிய கழிவுகளை சேகரிக்க வேண்டும். வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகளையே இதற்கு பயன்படுத்தலாம்.
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிட வேண்டும். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பு – ஆடு வளர்ப்பு முறை

ஆடு களில் இரண்டு வகைகள் உண்டு.
  • செம்மறி ஆட்டு இனங்கள்
  • வெள்ளாட்டு இனங்கள்
செம்மறி ஆட்டு இனங்கள்
இந்திய இனங்கள்
ஜம்நாபாரி, பீட்டல், பார்பரி, தெல்லிச்சேரி, மலபாரி, சுர்தி, காஷ்மீரி, வங்காள ஆடு ஆகிய இனங்கள் இந்திய இனங்கள் ஆகும்.
அயல்நாட்டு இனங்கள்
அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன் ஆகிய இனங்கள் உள்ளன.

கால்நடை பராமரிப்பு – முயல் வளர்ப்பு முறை

இரகங்கள்
அங்கோரா இனங்கள், இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ, நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை, வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் ஆகிய முயல் இரகங்கள் உள்ளன.
வீட்டு மேலாண்மை
ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவைப்படும். அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு அமைக்க வேண்டும். தனித்தனியாக கூண்டு செய்யாமல், பத்தடி நீளம், நான்கடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் ஒரு கூண்டு செய்து, அதை இரண்டு, இரண்டு அடியாகப் பிரித்துக் கொள்ளலாம்.
இது வளரும் முயல்களுக்கான கூண்டு அமைப்பு ஆகும். குட்டி ஈனும் முயல்களுக்கு இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 கேஜ் என்ற கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலிற்கு காலில் புண்கள் உண்டாகாது.

திருநீற்றுப் பச்சிலை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

திருநீற்றுப் பச்சிலை, தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட மூலிகையாகும்.
தற்போது பிரான்ஸ், இந்தோனேஷியா, மொராக்கோ, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.
திருநீற்றுப் பச்சிலை என்னும் மூலிகையானது, திருநீற்றுப்பத்திரி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்