Monday, 16 December 2019

அம்மான் பச்சரிசி (சித்திரப் பாலாடை)

1.  இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும் வாய் நாக்கு உதடு ஆகியவற்றில் வெடிப்பு புண் தீரும்./

2. தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத் தாது உடல் பலப்படும்.

3. கீழாநெல்லியுடன் சமன் இலை சேர்த்து காலை மதியம் இரு வேளை எருமைத் தயிரில் உண்ண உடல் எரிச்சல் நமைச்சல் மேக ரணம் தாது இழப்பு தீரும்.



4.  பூவுடன் 30 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய்ப்பால் பெருகும்,

5. பாலை தடவி வர நகச்சுற்று முகப்பரு பால்பரு மறையும் கால் ஆணி வலி குறையும்.

6.  இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்து பசும்பாலில் கலக்கி காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு மலக்கட்டு நீர்கடுப்பு உடம்பு நமச்சல் ஆகியவை தீரும்.

No comments:

Post a Comment