Tuesday, 10 December 2019

சப்பாத்தி பிட்சா

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு — 1 கப்
குடைமிளகாய் — 1/4 கப் (நறுக்கியது)
துருவிய சீஸ் — 1/4 கப்
சாஸ் செய்வதற்கு…
எண்ணெய் — 1 டீஸ்பூன்
உப்பு — தேவையான அளவு
பூண்டு — 1/2 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம் — 1/2 கப்
தக்காளி — 1
தக்காளி சாஸ் — 1 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் — 1 டீ ஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி — 1/4 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் — 1/8 டீ ஸ்பூன்



செய்முறை:
கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் மென்மையாக பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் வட்டமாக தேய்த்து, சப்பாத்திகளாக சுட்டு எடுத்து கொள்ள வேண்டும்
கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு வேகவைத்து தோல் உரித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சூடான எண்ணெயில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் தக்காளி சாஸ், மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளியையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
குடமிளகாயை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒவ்வொரு சப்பாத்தியின் மீதும், செய்து வைத்துள்ள சாஸை தடவி, அதன் மீது வதக்கி வைத்துள்ள குடமிளகாய் மற்றும் சீஸ் தூவி, மீண்டும் தோசைக்கல்லில் 2 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து எடுத்தால் ருசியான சப்பாத்தி பீட்சா ரெடி!!!

No comments:

Post a Comment