Monday, 13 August 2018

சில்லி பிரை இட்லி

தேவையான பொருட்கள்:
இட்லி – 12
தக்காளி சாஸ் – 4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி – 2 கொத்து
சில்லி சிக்கன் மசாலா – 1 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
கரம்மசாலா தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
வெங்காயத்தாள் – சிறிதளவு
குடமிளகாய் – 1
சோயா சாஸ் – 2 ஸ்பூன்



செய்முறை:
இட்லியை வேக வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தாள், குடமிளகாயை துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு 20 விநாடிகள் வதக்கவும்.
அதன் பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயை போட்டு வதக்கவும்.
அத்துடன் உப்பு, சில்லிப் பவுடர், தக்காளி சாஸ், சோயா சாஸ், கரம்மசாலா தூள் போட்டு நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மேலே தூவி கிளறவும்.
இப்போது பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விடவும். மசாலா இட்லியில் சேரும்படி பிரட்டி விடவும்.
சுமார் ஒரு நிமிடம் வேகவிட்டு, வெங்காயத்தாள் சேர்த்து கிளறவும். மசாலா இட்லியில் இறங்கியுள்ளதா என்று ருசி பார்த்து, இறக்கவும்.
சுவையான சில்லி இட்லி ரெடி.
இட்லியை பொரிக்காமல், வேக வைத்த இட்லியை போட்டும் செய்யலாம்.

No comments:

Post a Comment