Monday, 26 October 2020

கை தட்டுதல்

சில விடயங்களை கவனித்து பாருங்கள். அவை சின்ன சின்ன விடயங்களாக இருக்கும். ஆனால்  பெரும் நன்மைகளை செய்து விடும். 

இங்கும் கூட "கை தட்டுதல்" என்பது ஒரு சின்ன விடயம். நாம் பிறரை உற்சாகப்படுத்த கைகளை தட்டுகிறோம். அவர் அந்த ஒலி அலைகள் மூலம் உற்சாகம் கொள்கிறார். ஆனால் நாம் நம் உடலில் தோன்றும் அதிர்வலைகளால் உற்சாகம் கொள்கிறோம். 


நாம் அடுத்தவர்களுக்காக கை தட்டும் அதே நேரம் நமக்காகவும் கொஞ்சம் கை தட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். 

பிராண முத்திரை

மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

Saturday, 10 October 2020

கிருத்திகை மந்திரம்

 🌺வாழ்வில் அனைத்து யோகங்களையும் பெற உதவும் கிருத்திகை மந்திரம்🏵


🌺நமக்கு கிடைத்த இந்த வாழ்கையை சிறப்பாக்கிக் கொள்ள நமக்கு நோய்கள் அணுகாத உடலாரோக்கியமும், நினைத்த போது நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நல்ல செல்வ நிலையும் வேண்டும். 

சோம வாரம் கார்த்திகை விரதம்

 சோம வாரம் கார்த்திகை விரதம் நவக்கிரக வழிபாடு

 புரட்டாசி சோமவாரத்தில் சிவ வழிபாடு செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. அதேபோல் சோம வாரத்தில் கார்த்திகை விரதம் வருவது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. இந்தநாளில் சிவனாரை வணங்கி, முருகக் கடவுளை வணங்கி, நவக்கிரகத்தை வலம் வருவது தோஷங்கள் அனைத்தையும் நீக்கும். சந்தோஷத்தைப் பெருக்கும்.

 சோமவாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். திங்கள் என்றால் சந்திரன். சோமன் என்றால் சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று. சந்திரனைப் பிறையென சிரசில் சூடிக்கொண்டிருப்பவர் என்பதால் ஈசனுக்கு சோமன் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் சந்திரசேகரன் என்கிற திருநாமமும் உண்டு.

Monday, 14 September 2020

பிரதோஷம்

அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான்.
அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.

அவளிடம் வந்த நந்தி,""தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன்,

ஞாயிறு பிரதோஷம்

ஞாயிறு பிரதோஷம்... ராகுகால பிரதோஷ தரிசனம்!

ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. இன்று 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள்.

இன்று பிரதோஷம். இந்த நாளில், சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.

Tuesday, 8 September 2020

காசி க்ஷேத்திரம் மகிமை

காசி க்ஷேத்திரத்தில் பார்வை படும் இடமெல்லாம் லிங்க ஸ்வரூபம் காணப்படும். தரையில் பல இடங்களில்ந லிங்க ஸ்வரூபம் இருப்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் காசி நகரத்தில் மலஜலம் கூட கழிக்காது நகருக்கு வெளியே செல்வார் என்றும், காஞ்சி மஹா பெரியவர் காசியில் வசிக்கும் காலங்களில் காலில் பாதுகையே அணியமாட்டார் என்றும் கூறுவர். காசியில் செயலேதும் புரியாமல் சும்மா படுத்திருந்தாலும் உயர்ந்த யோகம் செய்வதற்கும் மேலாகும் என்பது பொதுவான கருத்து.

காசி விஸ்வநாதரின் தேவி விசாலாட்சி அம்மனாகும் . 1893 -ஆம் ஆண்டு தேவிக்குத் தனிக்கோயில் நகரத்தார்களால் அமைக்கப்பெற்று இங்கும் 3 வேளை பூஜைக்கு நகரச் சத்திரத்தில் இருந்து "சம்போ' உடன் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. தீபாவளியின்போது மட்டும் இரண்டு நாள்களுக்கு நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் உள்ள ஸ்வர்ண உற்சவ விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுகின்றார்.

கடையம் வந்தால் கவலை தீரும்!

கடையத்துக்கு வந்தால் கவலைகள் பறந்தோடும் என்பார்கள். கடையத்தில்தான், வில்வங்களில் ஈடுபாடும் ஆசையும் கொண்ட வில்வவனேஸ்வரர் குடிகொண்டிருக்கிறார்.

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது கடையம் . அழகிய கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் வில்வ வன நாதர். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீநித்ய கல்யாணி அம்பாள்.

அற்புதமான ஆலயம். புராதனமான திருத்தலம். ஒருகாலத்தில் வில்வ வனமாக இருந்த இந்தத் தலத்தில் கோயில் கொண்டதால், சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வேண்டிக் கொண்டால் நம்மையும் நம் வாழ்வையும் சிவனார் பார்த்துக் கொள்வார்.

அருள்மிகு ஸ்ரீ மருதாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வர் திருக்கோயில்,. ரங்கமலை,

அருள்மிகு ஸ்ரீ மருதாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வர் திருக்கோயில்,.
ரங்கமலை,
ஆலமரத்துப்பட்டி,
அரவக்குறிச்சி வட்டம்,
கரூர் மாவட்டம்.

 ( ஸ்ரீ விஷ்ணு பெயரில் அமைந்துள்ள இந்த ரங்க மலையில், சிவபெருமான் ஆலயம் அமைந்துள்ளது இம்மலைச்சிறப்பு.

( 🤔தன் தங்கையை திருமணம் செய்த ஈசனுக்கு, ரங்கநாத பெருமாள் தந்த அன்பு பரிசு என்கிறார்கள்)

கரூர் to திண்டுக்கல் (NH-7) தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் சென்றிருந்தால், திருவண்ணாமலை தோற்றத்துடன் அதை விட சற்று பெரிதாக (சுமார் 3500-அடி உயரம்) அருட்காட்சியளிக்கும் இந்த ரங்கமலை நிச்சயம் உங்கள் பார்வை தரிசனம் கண்டிருக்கும்.

அம்மணி அம்மன் கோபுரம்....

ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல....

அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.*

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.